Saturday, 10 February 2024

கோகுல் பிரசாத்


நமது தெரிவின் (choice) மீதான அகந்தையைக் கைவிடுவதே முதன்மை விடுதலை. நாம் எடுத்த முடிவு என்பதால் அதை நம் ஆளுமையின் பகுதியாகக் கருதுகிறோம். ஆகையால் அதைத் தவறென ஒப்புக்கொள்வதையும் கடந்துசெல்வதையும் அகங்காரம் ஏற்க மறுக்கிறது, ஒத்திப்போட விரும்புகிறது, எப்படியாவது சரிசெய்ய முயல்கிறது. அதைப் பிடித்துத் தொங்குகிறது. ரத்த உறவைப்போல, பிள்ளையைப் போல, நம் தெரிவையும் சீராட்டிப் பொத்திப் பாதுகாத்து வலுக்கட்டாயமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். இது அவசியமற்றது, உதற வேண்டியது. ஒரு முடிவின் மீதான பிடிமானத்தைக் கைவிட்டாலே வாழ்வில் பாதிக் காயங்களைத் தவிர்த்துவிடலாம்.

-கோகுல் பிரசாத்

No comments:

Post a Comment