Thursday, 5 December 2024

புத்தகம்-30


Reading_Marathon2024
#24RM050

Book No:30/100+
Pages:160

மரபு மருத்துவம்
-டாக்டர் வி விக்ரம் குமார்

சிறிய வயசுல புத்தக கடைக்கு போன உடன் முதலில் கண்ணில் படுவது ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் தான் .எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் அந்த பக்கங்களை பள்ளி நாட்களில் புரட்டிய நினைவு. அதே போல் தற்போது புத்தகக் கடைக்கு போகும் போதெல்லாம் மருத்துவம் சம்பந்தமான உணவு சம்பந்தமான உடல் சம்பந்தமான புத்தகங்களை எல்லாம் பார்க்கும் போது சற்று ஆர்வமுடன் புரட்டிப் பார்ப்பது வழக்கம். ஏனெனில் நமக்கு தெரியாத தகவல்கள் இருக்கும் அல்லதுசெய்கின்ற நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்தும் தகவல்களாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் தான். அதேபோலத்தான் இந்த புத்தகமும் கைக்கு கிடைத்தது.

தி இந்து நாளிதழில் நலம் வாழ இணைப்பிதழில் வெளியான 40 கட்டுரைகளின் தொகுப்பு தான் இது. வாரந்தோறும் படித்திருந்தாலும் புத்தகமாய் படிக்கும் போது ஒரு இன்பம் தான். தலைவலி இருமல் வந்தவுடன் அருகில் இருக்கும் மருந்து கடைக்கு சென்று இருபது ரூபாய் கொடுத்தால் மாத்திரை கொடுப்பார்கள் .உண்டு விட்டு படுத்தால் காலையில் தலைவலி குணமாயிருக்கும். ஆனால் உண்மையில் அந்த காலத்தில் ஆவி பிடிப்பது என்பது தான் தலைவலிக்கு சிறந்த தீர்வாக இருந்தது என்பதை அக்கால மனிதர்கள் அறிவார்கள் .அதனை வலுப்படுத்தும் நோக்கில் முதல் கட்டுரை நல்லது செய்யும் ஆவி என்ற பகுதி இருக்கின்றது.

அவசர உலகில் ஒற்றட முறைகளை சினிமாவில் மட்டுமே அதுவும் பழைய சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும் .ஆனால் வாத நோய்கள் தீர, கட்டிகள் வீக்கங்கள் மறைய, வெந்நீர் ஒற்றடம் ,கப நோய்கள் மறைய, முள்தைத்த காயத்துக்கு என ஒற்றடத்தின் பல்வேறு வழிமுறைகளை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

முழுமையாக குளிப்பது குளியல் என்பார்கள் அதாவது கழுத்து கீழ் மட்டும் குளிப்பது குளியல் நல்லதல்ல. எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையை பற்றி சொல்லும்போது செவ்வாய் வெள்ளிகளில் பெண்களும், புதன் சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும். அத்துடன் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் என்னும் பிணியணுகா விதி பாடல் எண்ணெய் தேய்த்த நாள் என்று குளிக்க வெந்நீரையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது .உடல் சூடு தூக்கமின்மை மன அமைதியின்மை ஆகியவற்றை குறைத்து மனதை அமைதிப்படுத்த என்னை குளியல் எவ்வாறெல்லாம் உதவி புரிகிறது என்பதை சொல்லி இருக்கிறார்.
என்னுடைய நண்பர் ஒருவரும் வாரந்தோறும் என்னை குளியல் எடுப்பார். என்னிடமும் எண்ணெய் குளியல் எடுக்க பரிந்துரைப்பார் .இன்றும் இரும்பு போன்ற தேகத்துடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.

பழைய உணவு பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றை இந்த அவசர உலகில் நாம் அதிகம் உண்கிறோம்.நோய் நம்மை நெருங்காமல் இருக்க 'முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்' என்ற கருத்தை சித்த மருத்துவர் தேரையார் கூறுகிறார் .திரிகடுகம் எனும் நூலும் பழைய உணவை சாப்பிடாமல் நாள்தோறும் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

*உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியை தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் மெலடோனின் ஹார்மோன் நம்முடைய தூக்கம் விழிப்பு நிலைகளை கட்டுப்படுத்தவும் ,ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

*எல்லா சூழ்நிலைகளிலும் நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும் உடல் எடை அதிகரிக்கவும் கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் விளைவால் ரெசிஸ்டன்ட் பாக்டீரியாக்கள் அதிகரித்து கோழிகள் இடையே அந்த நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகிறது இந்த நோய்களின் தாக்கம் அதை சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல் நீள்கிறது.

*உணவு சாப்பிட்ட பின் குறுநடை நடப்பது ஆரோக்கியத்தை தரும். அது உணவை செரிப்பதற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகள் சிறப்படையச் செய்யும். வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் கூழ்மங்களின் நகரும் தன்மை விரைவு படுத்தப்பட்டு செரிமானம் முறை படுத்தப்படும்.

கிராமங்களில் பிறந்து வளர்ந்தவருக்கு அருகில் இருப்பவர்களின் மருத்துவ குணமும் மூதாதையர்களின் அனுபவமும் கை கொடுக்கும். நகரத்தில் அது நிச்சயம் தவற விடுகிறோம். ஒவ்வொரு செடிகளின் பெயரையும் அதன் மருத்துவ குணத்தையும் கூறிய நமக்கு சிறுவயதிலேயே பெரியவர்கள் புகட்டி விடுவார்கள். அதுதான் கை வைத்தியம் பாட்டி வைத்தியம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகில் அதை எல்லாம் விட்டு நாம் மிக நீண்ட தூரம் வந்து விட்டோம் .உணவு முறைகளில் மாற்றம் வந்து விட்டது. வருடத்தின் எல்லா நாள்களிலும் இட்லி தோசை ஒன்று நமக்கு கை கொடுக்கிறது. சிறுதானியங்களை அறவே மறந்து விட்டோம் ஏதேனும் உணவுத் திருவிழாக்களில் பார்த்தால் தன் உண்டு

ஆகவே நாம் சிறு தானியங்களையும் முன்னோர்களின் வாழ்க்கை முறையும் அவ்வப்போது கொஞ்சம் பயன்படுத்திக்கொண்டால் தான்.. நம்மை சூழ்ந்துள்ள பிணிகளை வெல்வோம். மெடிக்லைம் பாலிசியை தேடி ஓட மாட்டோம். ஆகவே ஆரோக்கிய தரும் விஷயங்களை நாம் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டால் நாம் 100 வயது வரை வாழ வேண்டும் என்ற பேராசை இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக 60 வயது வரை வாழ்ந்தாலே போதும் என்ற எண்ணங்களை நோக்கி சிறகடித்து பரக்கவும் இது போன்ற ஆரோக்கிய தரும் புத்தகங்களையும் அவ்வப்போது வாசித்து பயன்பெறுவோம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment