ஒளி என்பது கற்றை (wave) மற்றும் துகள் (particle) இரண்டும் ஆகும். துகளாக இருக்கும் ஒளி கற்றைகளாக விண்வெளியில் ஒளியின் வேகத்தில் பறக்கும். இது ஒளியின் இரட்டை இயல்பு எனப்படும் குவாண்டம் இயற்பியலின் ஒரு முக்கியமான கொள்கை.
இப்படி நொடிக்கு 3 லட்சம் கிமி வேகத்தில் பறக்கும் ஒளிக்கு மரணம் என்பதே கிடையாதாம். ஒளி என்பது அடிப்படையில் போட்டான் (Photon) துகள்கள். அதற்கு எடை கிடையாது. அதனால் எத்தனை லட்சம் கோடி ஆண்டுகள் கழித்தாலும் ஒளிக்கு அழிவே இல்லை. பெருவெடிப்பில் 13.80 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒளீயை கூட நாம் காணமுடிவது இதனால் தான்
போட்டான்கள் பூமியின் மேலோ, வேறு எதன்மேலோ பட்டால் மட்டுமே அதன்பயணம் முடிவுக்கு வரும். அத்துடன் ஒளி இறந்துவிடும். ஒளி உறிஞ்சப்படுதல், சிதறல் போன்ற பிற செயல்முறைகளாலும் அதன் தீவிரம் குறையலாம்.
ஆனால் எதன்மேலும் அது படவில்லை எனில் ஒளியானது நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஆயுள் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான் அதற்கான விதி. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். எங்கோ பல லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து பயணித்து வந்து சேரும் ஒளியை எல்லாம் தொலைநோக்கி மூலம் காண முடிவது இதனால் தான்.
வெப்பமும் அதுபோன்றதே. வெப்பம் பூமி, மற்றும் காற்றில் மோதி, காற்றையும், பூமியையும் சூடாக்குவதால் தான் பூமி வெப்பமாக உள்ளது. பூமிக்கு மேலே விமானத்தில் செல்ல, செல்ல சூரியனுக்கு அருகே சென்றாலும், அங்கே குளிராக இருப்பது இதனால் தான். சில பறவைகள் 8000 மீட்டர் உயரம் வரை பறக்கும் சக்தி கொண்டவை. அங்கே காற்று மிக லேசாக இருப்பதால் வெப்பம் மிக குறைவாக இருக்கும். சுமார் மைனஸ் அறுபது டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும். இறகுகள் மற்றும் அதன் பயாலஜி காரணமாக்வே பறவைகள் இதை தாக்குபிடிக்கின்றன
விண்வெளியில் சூரியவெப்பம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும். இதற்கும் மரணம் என்பதே இல்லை. விண்வெளியில் கதிர்வீச்சுகள் நீண்டதூரம் பரவி அதன் வெப்பமானது ரேடியேஷன் ஆக ஆகிவிடும்: கதிர்வீச்சு என்பது வெப்பத்தின் ஒரு வடிவம் தான். வெப்பம் கதிர்வீச்சாக மாறும்போது அதன் தீவிரம் குறையும்.
சுமார் பத்துக்கு பின் 100 பூஜ்யங்கள் போட்டால் எத்தனை ஆன்டுகளோ, அத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் இறந்து, போட்டான்கள் ரேடியோ கதிர்களாக மாறி, மறைந்து பிரபஞ்சமே காரிருளில் மூழ்கிவிடும் என்கிறார்கள்.
அப்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் துளிகூட வெப்பமாகவோ, வெளிச்சமாகவோ இருக்காது,. எல்லையற்ற கொடிய குளிர். அணுக்கள் உறையும் அளவு குளிர், எதுவும் தென்பாட காரிருள். " Heathdeath" என இந்த நிகழ்வு அழைக்கபடுகிறது. அதன்பின் எத்தனை லட்சம் கோடி ஆண்டுகள் இந்த காரிருள் நீடிக்கும், அதன்பின் என்ன என யாருக்கும் தெரியாதாம்
கற்பனைகள் கூட தோற்கும் இடம் பிரபஞ்சம் தான்
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment