கணவாய்:
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இரண்டு மலை முகடுகளுக்கு இடையே செல்லும் பாதை.....
கணவாய் என்பது பெரிய மலை சாலையில் ஏறி மற்றொரு பக்கம் இறங்கும் பாதை இல்லை.......
இரண்டு மலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு மேடான பகுதி இருக்கும்....... அதன் வழியாக செல்லும் பாதை கணவாய் என்று அழைக்கப்படுகிறது........
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகமாக கணவாய்கள் உள்ளன......
தமிழகத்தில் உள்ள முக்கியமான கணவாய்கள்
1. தொப்பூர் கணவாய் :
சேலம் - தருமபுரி இடையே உள்ள ஒரு முக்கியமான கணவாய்.....
இந்த கணவாயில் 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறுகிறது.....
2. ஆண்டிப்பட்டி கணவாய்:
தேனி மாவட்டத்தையும், மதுரை மாவட்டத்தையும் இந்த கணவாய் இரண்டாக பிரிக்கிறது......
இந்த கணவாய் காரணமாகவே வைகை ஆறு தேனி மாவட்டத்தில் வடக்கு நோக்கி பாய்ந்து வைகை அணையை அடைந்து வைகை அணையில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது......
3. மஞ்சவாடி கணவாய்:
சேலம் ( அயோத்தியாபட்டினம் ) - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கணவாய்
கல்வராயன் மலைகளையும், சேர்வராயன் மலைகளையும் பிரிக்கிறது.....
4. மேலுமலை கணவாய்:
கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே உள்ள இந்த கணவாயில் 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறுகிறது......
இதில் தொப்பூர் கணவாய் மிகவும் ஆபத்தான கணவாய் பகுதி.......
நீண்ட கணவாய் பகுதி.....
இது தவிர தருமபுரி மாவட்டத்தில்
பாலக்கோடு - ராயக்கோட்டை( கிருஷ்ணகிரி) இடையே
மாராண்டஹள்ளி - தேன்கனிக்கோட்டை( கிருஷ்ணகிரி) இடையே
பென்னாகரம் - அஞ்செட்டி ( கிருஷ்ணகிரி) இடையே.....
தீர்த்தமலை - தானிப்பாடி ( திருவண்ணாமலை மாவட்டம்) இடையே
கோட்டபட்டி - தும்பல் ( சேலம் மாவட்டம்)
ஆகிய கணவாய்கள் உள்ளது.........
படம்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் நாடுகளை பிரிக்கும்
இந்துகுஷ் மலையில் உள்ள கைபர் கணவாய்......
பாலக்காடு கணவாய் கேரளா என்பதால் அதை பற்றி குறிப்பிடவில்லை.....
No comments:
Post a Comment