Reading_Marathon2024
#24RM050
Book No:31/100+
Pages:138
சீமுர்க்
-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
கதை சொல்லுவதில் சம்பவங்களை கோர்வையாக்கி சொல்வது ஒருவகை என்றால், வார்த்தைகளின் மாயாஜாலத்தையும் வாசிப்பனுவத்தையும் சேர்த்துக் குலைத்து கதையை சொல்லுதல் என்பது இன்னொரு முறை. இந்த இரண்டாம் வகை கதைகள் தான் இந்த புத்தகத்தில் உள்ள ஒன்பது கதைகளும்.
ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் மதுபான விடுதிக்குச் செல்லும் நாயகன் அங்கு எதிர்பார்த்து இருக்கும் பூனையை பற்றி விவரிக்கிறான். உயர் குடியில் நல்ல கம்பெனியில் பெங்களூருவில் பணிபுரியும் அவன் வாரத்துக்கு ஒருமுறை மதுபான விடுதிக்கு வந்து தன் மனதின் ஓவியங்களை சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் ஒப்பிட்டு பார்த்து இருப்பான். கடந்த காலத்தில் பனி மூடிய சிகரங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கூர்காவின் அன்பினை பெரும் அவன் அவனுடைய வாழ்க்கையையும் கேட்கிறான். அதன்பின்பு இருவருக்கும் நடக்கும் உரையாடல்களின் வழியே அவன் எவ்வாறு இவருடைய எண்ணங்களை மாற்றி அமைக்கிறான் என்பது தான் கதை.
மூதாதையரிடமிருந்து இரண்டாம் உலகப் போர் கால வாள் ஒன்று தாத்தாவிடம் இருந்தது. அந்த வாளின் பெருமையை உணர்ந்தவர் தாத்தா மட்டுமே. பிறகு அவர் மதித்ததால் நாங்கள் அனைவரும் அவற்றை மதித்து வந்தோம், பாதுகாத்து வந்தோம். திடீரென அந்த வாள் காணாமல் போகிறது. தலைமுறை இடைவெளி தாண்டி அந்த வாள் மதிக்கப்படுகிறதா அல்லது உதாசீனப்படுத்தப்படுகிறதா என்பது தன் வரலாற்று கனவுகளின் வரலாறு
செய்த வாளின் வரலாறும் என்ற கதை.
பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவரும் கிரிக்கெட்டை குறித்து ஆய்வு செய்பவருமான பரத்குமார் மாதத்தின் இரண்டாம் சனி ஞாயிறு காதலி வைஷ்ணவியோடு செலவிடுபவர். அவர்களின் நண்பர்களான இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரசாந்த் மற்றும் வசுதாவிடம் வார இறுதியில் கொண்டாட செல்லும் போது பிரசாந்த் மெய்யியல் தர்க்க உரையாடல் தான் 'விடுமுறை தினத்தில் ஓர் அனார்கிஸ்ட்' இக்கதையாக சொல்லப்படுகிறது.
அலுவலகத்தில் பணியாற்றி வரும் நாயகனுக்கு 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கஸ்வினி குறித்த நினைவு மேலிடுகிறது. அந்த நினைவின் வழியே செல்லும் கதைகளில் அவர் கண்ட வாழ்வியல் என்ன என்பதை கனவின் வழியே கண்ட சொற்களை நமக்கு சொல்லி இருப்பதாக சீமூர்க் கதை இருக்கிறது
சிறுகதைகள் புதுமை வடிவில் ஜே.எம் கூட்ஸின் நாவலான 'த போல்' என்பது அடியொற்றி நீத்தார் கதையை எழுதியுள்ளார். அதில் உள்ள சிறப்பு என்னவெனில் எண்களிட்டு பாயிண்ட் ஆக இருக்கும் கதைகளில் நீத்தார் கதை எழுதி இருப்பார்.
அடுக்ககத்தில் குடியிருக்கும் நாயகன் மேலே கீழே வரும் போதும், போகும்போதும் கருப்பு பூனை ஒன்று இருப்பதை கண்டார். வளர்ப்பு பிராணி வளர்ப்பதை விரும்பாத தன் தாயிடம் எப்படி சொல்வது எனக்கு அந்த கருப்பு பூனை பிடிக்கும் என்று. இருந்தாலும் உள்ளூர ரசித்து கொண்டு சென்றவன் நான்காம் தளத்தில் வசிக்கும் பிருந்தா தான் பூனையின் உரிமையாளர் என்று தெரிந்தது. ஒரு கட்டத்தில் அந்த பூனையை பிருந்தா கொன்று விட்டதாக செய்தி வருகிறது. ஏன் கொன்றார் எதற்காக கொன்றார் என்பதற்கான நினைவுத் திரையில் கருப்பு பூனை கதை சொல்லி இருப்பார்
ஒருவரின் அல்லது வறிய நிலையை கண்டு இறங்கினால் அது கிருபை மட்டுமே. ஆனால் அதை மாற்றுவதற்கு முயன்றால் அது தயை. கிருபை எளியவர்களுக்கானது. தயை வலியவர்கள் செய்வது. கதையின் நாயகன் பணியாற்றும் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு 100 பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கு 100 ரூபாய் வழங்குவது அவருடைய திட்டமாக இருந்தது. அவ்வாறு பல இடங்களில் தேடி 100 பிச்சைக்காரர்களுக்கு தலா 100 ரூபாய் கொடுக்கிறார். நண்பர்கள் இதனை கேலி செய்கிறார்கள் மறுநாள் நீண்ட நாளாக தர வேண்டிய நண்பர் அந்த பத்தாயிரம் தொகையை அனுப்பி இருந்தார். இரண்டையும் ஒப்பிட்டு நோக்கி கிளரிஸ் லிஸ்பெக்டரின் வரிகளை மேற்கோளாகக் கொண்டு இந்த கதை முடிகிறது
*எதிர்காலம் என்ற ஒன்றில் நான் நுழைந்து வழி தெரியாமல் நிற்பதை போல் உணர்ந்தேன்
*எவையெல்லாம் நம் முன் தொடர்ந்து நிகழ்கின்றனவோ அவற்றில் நமது கவனம் குறைவதற்கு வெகுகாலம் ஆகிறது.
*இருளை விரட்டுவதற்காக ஒரு மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
*அறிவால் வாழ்பவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து கற்பது தேவையானது.
*கடவுள் மனிதனின் மெய்க்காப்பாளன், அரசு மனிதனின் வாயில் காப்பாளன். ஆனால் உண்மையில் மனிதன் அரசின், கடவுளின் அடிமை. எல்லா ஜனநாயக அரசுகளும் மனிதனை எஜமான ஸ்தானத்தில் வைத்திருப்பதாக நடிக்கின்றன.
*திருமணத்தை தவிர்ப்பதற்கு எனக்கு பெரிய காரணங்கள் ஏதுமில்லை. வாழ்வை குறித்த எனது பார்வைகளை போதுமானதாக இருந்தன.
மேல்நாட்டு பாணியிலான கதை சொல்லும் வகையை நம் ஊர் சிந்தனையோடும் கலந்து கொடுத்திருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் சொல்லி இருந்த விதமும் அணுகி இருந்த நோக்கமும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment