Monday, 30 December 2024

புத்தகம் 41


Reading_Marathon2024
#24RM050

Book No:41/100+
Pages:-232

உலகம் 20 குடும்பங்களுக்குச் சொந்தம்
-வேங்கடம்

திருப்பூரில் கடந்த ஆண்டு பஞ்சு விலை மிகவும் உயர்ந்து தொழில்கள் அனைத்தும் நலிவுற்று இருந்தன. காரணம் ஆன்லைன் டிரேடிங் முறை வந்ததால் என்று சொன்னார்கள்.இப்போது கொஞ்சம் சீராகிவிட்டது. சிறுவயதில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் நாய் வளர்ப்பது என்பது எல்லாரும் ஒரே நாயை வளர்ப்பது அல்ல. ஒவ்வொரு வருடமும் நாயின் வெவ்வேறு வடிவங்களை பார்த்து வருகிறேன் .இதை எல்லாம் யார் தீர்மானிக்கிறார்கள் ,எந்த நாயை வளர்க்க வேண்டும் என்று யார் சொல்கிறார்கள் என்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். ஆனால் ஏதேனும் ஒருவரின் விருப்பத்தின் பேரில்தான் இவை அத்தனையும் நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் உறுதியாக தெரிகிறது. அது போலத்தான் இந்த புத்தகத்தை படிக்க படிக்க என்னுடைய சில கேள்விகளுக்கு விடையாக இருந்ததே அறிய முடிகிறது.

பேராண்மை படத்தில் ஒரு வசனம் வரும் எப்ப படித்தாலும் சர்வதேச அரசியல் படிங்க என்று .இந்த புத்தகத்தின் அறிமுகத்திலும் கையில் இருந்து நழுவி விழுந்த காசு காலுக்கு அருகில் தான் விழுந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போல நம் எல்லா பிரச்சனைகளுக்கும் மிக அருகாமையில் உள்ள சிறு வட்டத்துக்குள் விடையைத் தேடிக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி இருப்பார்.
ஆனால் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் வெளியே பல காரணிகள் உண்டு என்பதை இந்த புத்தகம் விளக்கிக் கூறுகிறது. 

725 கோடி பேர் வாழும் இவ்வுலகில் மிகப்பெரும் பணக்காரர்கள் 20 குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே என்பது திகைக்க வைக்கிறது. தங்களின் சுய பாதுகாப்பு கருதி அவர்கள் ஏராளமான கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர். பெரும் பண முதலைகள் எந்த அரசாங்கங்களையும் உண்மையில் ஆள விடுவதில்லை. நாம் எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை பணக்காரர்களை தீர்மானிக்கிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்ற போதிலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் பணக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. அவர்களின் அதிகார பிரயோகம் எந்த எல்லை வரையிலும் சென்றடையும்.

உலக நாடுகளின் மையமாக பொருளாதார அதிகாரம் மையமும் அரசியல் அதிகார மையமும் ஆன்மீக அதிகாரம் மையமும் உள்ளதை விரிவாக அலசி உள்ளார். 

இலுமினாட்டி என்ற லத்தின் சொல்லுக்கு ஞானம் பெற்றவர்கள் என்று அர்த்தம். இலுமினஸ் என்பதன் பன்மைச் சொல்தான் இழுமினாட்டி. கோடி கோடியாக சொத்துக்களை கொண்ட மாபெரும் செல்வந்தர்கள் ராஜாக்கள் தலைமையில் பலரை உறுப்பினராகக் கொண்டு பல நூற்றாண்டாக இயங்கும் ரகசிய குழு தான் இவை. இவர்கள் பல்வேறு துறைகளில் நட்பு பாராட்டி பேசி மகிழ மாட்டார்கள் அனைத்து திட்டங்களையும் ரகசியமாக வைத்திருப்பது நோக்கமாகச் சொல்கிறார்கள் இவர்களின் பிள்ளைகளை பல துறைகளில் பயிற்சி பெற்று இவர்களை மேலே தூக்கி விட பத்திரிகை டிவி போன்ற மீடியாககள் அனைத்தும் இவர்கள் கையில் வைத்திருப்பதால்..இருக்கும் அறிவைக் கொண்டு அவர்களால் நாளைய தலைவர்கள் ஆவது மிக எளிதாகி விடுகிறது.

இலுமினாட்டிகளின் நோக்கம் எதிர்காலத்தை உலகை ஒரே குடையின கீழ் கொண்டு வருவது அதாவது ஒரே அரசாங்கம் ஒரே கரன்சி ஒரே கொள்கை என்பது.தொழில்மயமாவது நிறுத்திவிட்டு ஜீரோ குரோத் சொசைட்டியாக உருவாக்குவது. கணினி தொழில்களையும் சேவை தொழில்களையும் மட்டும் விட்டு வைப்பது. 2050 வருடத்திற்குள் சிறு போர்கள் நோய்கள் பட்டினி போன்றவற்றால் மூன்றாம் உலக நாடுகள் மக்கள் தொகை குறைந்தபட்சம் 300 கோடி ஆவது குறைப்பது போன்றவை சொல்கிறார்.

பொதுவாக Problem -Reaction- Solution என்ற கொள்கை படி குழப்பம் இல்லாத நாட்டில் கூட பிரச்சினைகளை தூண்டி விடுவது. அதற்கு மக்கள் எதிர்வினை ஆற்றுவது, அந்த குழப்பமான சூழலுக்கு தீர்வு காண்பதாக சொல்லி மூக்கை உள்ளே நுழைப்பது என்று அவர்களுடைய யோசனை மிகவும் நயவஞ்சகமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

தங்களை விட தாழ்ந்தவர்கள் சொல்லும் அறிவாளித்தனமான யோசனைகளை கூட என்றும் செயல்படுத்தாதவர்கள். கீழ் நிலையில் இருப்பவர்கள் என்றாவது செல்வத்திலும் பதவிகளும் சற்று மேல்நிலைக்கு வந்துவிட்டாலும் அவர்களை ஒரு பொருட்டாக இவர்கள் மதிக்கவே மாட்டார்கள். மக்களுடைய பலவீனத்தையும் கோழைத்தனத்தையும் முழுமையாக சுயயலாபத்துக்காக உபயோகித்துக் கொள்வார்கள். அதை சார்ந்த தங்களுடைய தலைமை பீடம் இருக்கிறது என்பதை உணர்ந்து இருப்பார்கள்.

வளர்ந்த நாடுகளுக்கு கடன் கொடுப்பது வளரும் நாடுகளுக்கு கடன் கொடுப்பது தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது என கடன் கொடுத்தே தங்களுடைய காரியங்களை சாதித்துக் கொள்ளும் ரோத்சைல்ட் குடும்பத்தினர் பற்றி விரிவாக சொல்லியுள்ளார். இவர்கள் மனது வைக்காமல் எந்த சண்டையுமே எந்த நாட்டோடும் நடைபெறாது பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் தங்கம் வெள்ளி போன்றவற்றிலும் இவர்களின் பங்கு அளப்பரியது.

உலக அளவில் ஆதிக்கம் செலுத்திய 13 குடும்பங்கள் பின்னணிகள் குறித்தும் தகவல்களாக செய்திகளாக சேகரித்து சொல்லியுள்ளார். வட்டி என்பது அணுகுண்டை விட மோசமானது லேசர் கதிர்களை விட கூர்மையானது கொடுமையானது ஒவ்வொரு அரசாங்கமும் உலக வங்கிய இடம் வாங்கும் கடனுக்கு எதிராக நாட்டு வரி வசூலிப்பை உத்தரவாதமாக கொடுக்கிறது வரி மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது அதாவது கடனுக்கு மறைமுகமான உத்தரவாதம் அந்நாட்டு ஒவ்வொரு பிரஜையும் தான் ஒவ்வொருவரும் பன்னாட்டு வங்கிக்காக உழைத்து வட்டியாகும் வழியாகவும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

*அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசி அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒரு மாநிலம் அல்ல அது தனிப்பட்ட நபர்களுக்கு சொந்தமானது. அதேபோல் அமெரிக்க டாலர் நோட்டை அச்சடித்து வெளியிடும் உரிமை பெற்ற பெடரல் ரிசர்வ் வங்கி அமெரிக்க அரசுக்கு சொந்தமானது அல்ல. தனி நபருக்கு சொந்தமானது.

*ஏழை மக்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்ய இயலாத நிலையில் ஒரு மூடிய சமூகமாக (Gated community ) சுவர் எழுப்பிக் கொண்டு வாழ்பவர்கள். 

சிந்திக்கத் துண்டும் விதத்தில் அமைந்த இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கருத்துக்களும் யோசித்துப் பார்த்தால் ஆமா ல்ல என்பது போலவே இருக்கும். இறுதியாக முத்தாய்ப்பான வரியோடு முடித்திருப்பார்." தீய சக்திகள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க அவர்களுக்கு ஒரே ஒரு தேவை தான் இருக்கிறது .அது நல்லவர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பது என்று"

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment