Reading_Marathon2024
#24RM050
Book No:37/100+
Pages:-300
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
-ஜான்.சி மேக்ஸ்வெல்
"ஒரு பெருமுயற்சியில் வெற்றி பெறுவதற்கான திறவுகோல், பிறரை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும் திறமையைப் பெற்றிருப்பது தான்"
தற்போதைய வாழ்க்கையில் தலைமைத்துவம் என்பது அடிக்கடி புழங்கப்படும் சொல்லாகும். தலைமைத்துவம் என்பது ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய அதிகாரியிடம் மட்டும் இருக்கும் குணம் அல்ல. சாதாரண மனிதனின் அன்றாட நிகழ்வில் நாம் நம்முடைய ஆளுமைத் திறனை வெளிப்படுத்துவதற்கு தலைமைத்துவம் மிகுந்த முக்கிய பங்கு வகிக்கிறது.
தலைமைத்துவம் என்பது வளர்க்கப்படுவது, கண்டுபிடிக்கப் படுவதல்ல.
தலைமைத்துவத்தையும் நிர்வாகத் திறனையும் குழப்பிக்கொள்ள வேண்டியது இல்லை. இப்புத்தகம் தலைமைத்துவத்தை பற்றி மட்டும் பேசுகிறது.தலைமைத்துவம் என்பது நம்மைப் பின்பற்றுபவர்களைப் பெறக்கூடிய திறமை.மேலதிகாரி தன் ஊழியர்களை வேலை வாங்குவார்; தலைவர் அவர்களுக்குப் பயிற்சியளிப்பார்.
தலைமைத்துவத்தின் ஒவ்வொரு அலகுகளிலும் அது குறித்த விரிவாக அலசப்பட்டுள்ளது. தலைவர் என்பவர் சுயநலமாய் இருக்கக் கூடாது. தனக்கு பின்னே தலைவர்களை உருவாக்க வேண்டும். அதற்கு உதாரணமான வரிகளை கொடுத்துள்ளார்.ஒருவர் சிறந்த தலைவராகத் திகழ்வதற்குக் காரணம் அவரது அதிகார பலம் அல்ல, மாறாக, பிறருக்கு அதிகாரம் வழங்கும் அவரது திறன்தான். வெற்றி பெற்ற ஒருவர், தனக்குப் பின் அதைப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யாதபோது, அது தோல்விதான், ஒரு தொழிலாளரின் முக்கியமான பொறுப்பு, வேலையைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்து, அதைத் திறம்படச் செய்ய அவர்களை உருவாக்குவதுதான்.
ஒரு தலைவனுக்குரிய திறவுகோல்களின் முக்கியமானது
"மக்களை இரண்டு காரியங்களைச் செய்ய வைப்பது மிகவும் கடினம்: ஒன்று, அவர்களைச் சிந்திக்க வைப்பது; மற்றொன்று, செயல்களின் முக்கியத் துவத்திற்கேற்ப அவற்றை வரிசைப்படுத்த வைப்பது."இதற்கு சான்றாக பரேட்டோ கொள்கையை சொல்கிறார் ஆசிரியர்.
நீங்கள் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும், பணத்தையும், ஊழியர்களையும் நீங்கள் முன்னுரிமை கொடுக்கும் 20 சதவீத விஷயங்களில் செலவிட்டால், அது உங்களுக்கு 80 சதவீத உற்பத்தியைக் கொடுக்கும்.
ஒரு தலைவனுக்கு தேவையான பண்புகளில் முக்கியமானது நாணயம்.நாணயம் என்பது நாம் என்ன செய்கிறோம் என்பதல்ல; மாறாக, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதுதான். நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பது நாம் என்ன செய்கிறோம் என்பதைத் தீர்மானிக்கும். நமது மதிப்புகள் அமைப்பு, தம்மிடமிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு நம்மில் ஒரு பெரும் அங்கமாகத் திகழ்கிறது. அது நம்மை வழிநடத்தும் 'வழிகாட்டும் அமைப்'பாகச் செயல்படுகிறது.
"ஒரு தலைவராக இருக்க வேண்டுமென்றால், புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அளிக்கக்கூடிய தலைமைத்துவத்தின் தரம், புதிய கருத்துக்களை மதிப்பீடு செய்யும் உங்கள் திறனையும், மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஏற்படும் மாற்றத்திலிருந்து மக்களுக்காக ஏற்படும் மாற்றத்தைப் பிரித்தறியக்கூடிய திறனையும் சார்ந்திருக்கும்."
'பீனட்ஸ்' என்ற கேலிச்சித்திரத்தில், சார்லி பிரவுன் லைனஸிடம், "லைனஸ், உன்னால் என் கேள்விக்கு விடையளிக்க முடியும். உன்னை யாருக்குமே பிடிக்கவில்லை என்று நீ உணர்ந்தால், நீ என்ன செய்வாய்?" என்று கேட்பான். அதற்கு லைனஸ், "நான் என்னைப் பாகுபாடின்றி அலசுவேன். பிறகு, என்னை மேம்படுத்திக் கொள்ள என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்பேன். சார்லி பிரவுன், இதுதான் என் பதில்," என்று கூறுவான். அதற்கு சார்லி, "நான் அந்த பதிலை வெறுக்கிறேன்," என்று பதிலளிப்பான். சார்லி பிரவுனைப் போல நம்மில் பலர், மாற்றத்தை எதிர்ப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
தலைமைத்துவத்தை விரைவில் அடைவதற்கான வழி: தீர்வு காணல்
"நீங்கள் எங்கே போக வேண்டும்?" என்று ஓட்டுனர் கேட்டார். "அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, எங்காவது போங்கள். எனக்கு எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் இருக்கின்றன," என்று கத்தினார். சில சமயங்களில் கடந்தகாலச் சந்ததியினரைவிட நமக்கு அதிகமான பிரச்சனைகள் இருப்பதாக நாம் நினைக்கிறோம்.
ஒரு கழுகு பெரும் வேகத்துடன் எளிதாகப் பறப்பதற்கு, அது தகர்த்தெறிய வேண்டிய ஒரே முட்டுக்கட்டை காற்று மட்டும்தான். ஆனால், அந்தக் காற்று முழுவதும் உறிஞ்சப்பட்டிருக்கும் வெற்றிடத்தில் அந்தப் பெருமைமிகு பறவை பறக்க நேருமானால், அது அக்கணமே கீழே விழுந்துவிடும். எந்தப் பொருள் பறப்பதற்குத் தடையாக உள்ளதோ, அதே பொருள்தான் பறப்பதற்கேற்ற சூழலாகவும் அமைகிறது.
*"தலைமைத்துவம் என்பது மக்களை உங்களுக்காகப் பணியாற்றச் செய்வது - அது அவர்களுடைய கடமையாக இல்லாதபட்சத்தில் கூட!" - ஃபிரெட் சுமித்
*எது உண்மையிலேயே முக்கியமானது என்பதை நாம் அடிக்கடி மிகவும் தாமதமாகவே கற்றுக் கொள்கிறோம்.
*ஜெஃப் டான்சிகளின் கேலிச்சித்திரம் ஒன்றில், ஒரு நிறுவனத் தலைவர் தன் ஊழியர்களிடம், "நேர்மைதான் நமது இந்த வருடத்தியக் கொள்கை," என்று அறிவிக்கிறார்.
*"ஆதிக்கம் என்பது ஒரு மேலதிகாரி தன்னிடம் வேலை பார்ப்பவர்கள்மீது கொண்டிருக்கும் அதிகாரம் அல்ல. மாறாக, அந்த அதிகாரத்தை அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தன் ஊழியர்களிடம் செல்வாக்குடன் விளங்கும் திறன்,"
*"என் மக்கள் என்னைப் புரிந்து கொண்டால், நான் அவர்களது கவனத்தை ஈர்ப்பேன். என் மக்கள் என்மீது நம்பிக்கை கொண்டால், நான் அவர்களைச் செயலாற்ற வைப்பேன்."
*"தான் செய்வது ஒருவராலும் கண்டுபிடிக்கப்பட முடியாது என்ற நிலையிலும் ஒருவன் என்ன செய்வானோ, அதுவே அவனது உண்மையான நடத்தைக்கான அளவீடு,"
*"தரக்கட்டுப்பாட்டில், நாங்கள் பொருட்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. செயல்முறையில்தான் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். செயல்முறை சரியாக இருந்தால், பொருளுக்கு உத்தரவாதம் உள்ளது,"
*மாற்றம், அறியாதவை குறித்த பயத்தை உருவாக்குகிறது.
*ஒரு மனிதன் செய்யக்கூடிய மாபெரும் தவறு, ஒரு தவறைச் செய்வதற்குப் பயப்படுவது என்று.
*"ஒரு விளக்கை மாற்ற எத்தனை பேர் தேவை?" அதன் விடை: "நான்கு. விளக்கை மாற்ற ஒருவர், பழைய விளக்கு எவ்வளவு நன்றாக இருந்தது என்று நினைத்துப் பார்க்க மூவர்.
*"நாம் எதை அனுபவிக்கப் போகிறோம் என்பதைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். அதை எப்படி அனுபவிக்கப் போகிறோம் என்பதை நாம் தேர்ந்தெடுக்கிறோம்."
*தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் அல்லது அதைச் செய்ததற்கான எல்லாப் புகழையும் தானே பெற வேண்டும் என்று நினைப்பவர் எவரும் ஒரு சிறந்த தலைவராக உருவாக முடியாது.
தலைமைத்துவம் குறித்த பல்வேறு கருத்துக்கள் பல்வேறு உதாரணங்களுடனும் மேற்கோள்களுடனும் கிளை கதைகளுடனும் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக புத்தகம் பதிவு செய்கிறது
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment