Tuesday, 17 December 2024

ஜி.ராமானுஜம்


உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அளவுக்கு மீறிக் கவனிக்கக் கூடாது.  உடலில் உள்ள சிறு சிறு தொந்தரவுகளைக்கூட பெரிய பெரிய வியாதியாக நினைத்து அடிக்கடி மருத்துவர்களிடம் சென்றால் தேவையில்லாத பரிசோதனைகள், மருந்துகள் எனப் பிரச்சனைகள் கூடிக் கொண்டேதான் போகும். ஒன்று மருத்துவரும் பயந்து போய் பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்ப்பார் அல்லது பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையாக இருந்தால் உங்களை வைத்து ஒரு ரூம்  அல்லது குறைந்த பட்சம் ஒரு சுவராவது கட்டி விடுவார்கள். 

 முக்கியமாக இணையத்தில் நோய்  அறிகுறிகளை வைத்துத் தேடிப் படித்தால் கட்டாயம் பெரிதாக பீதி அடையத்தான் செய்வீர்கள். இது போல் விபரீதமாகக் கற்பனை செய்வதற்கு Hypochondriasis என்று பெயர். இப்போது Illness anxiety என அழைக்கப் படுகிறது. ( உடனே எனக்கு illness anxiety இருக்குமோ எனப் பயப்படாதீர்கள்)

பாதிக்கு மேற்பட்ட உடல் பிரச்சனைகளை  முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி , உறக்கம், உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமே சரி செய்ய முடியும். ( நான்கு உ க்கள்)

( இருகைகளிலும் பெரிய பைகள் நிறைய மருத்துவ பைல்களோடு இன்று வந்த ஒருவரைப் பார்த்தபின் தோன்றியது)

- டாக்டர்.ஜி.ராமானுஜம்.

No comments:

Post a Comment