Reading_Marathon2024
#24RM050
Book No:36/100+
Pages:-247
திருநெல்வேலி எழுச்சியும் வ உ சி யும் 1908
-ஆ.இரா வேங்கடாசலபதி
வரலாறு என்பது நாம் தெரிந்து கொண்ட வரலாற்றை விட நாம் அறிந்து கொள்ளும் வரலாற்றை மீண்டும் நம் மனதில் கட்டமைக்கிறோம். நேற்று திருச்செந்தூர் செல்லும் வழியில் பாரதியாரின் இல்லத்துக்குச் சென்றிருந்தபோது கிடைத்த தகவல்.. அது பாரதியாரின் தாயார் வீடு அவரின் தந்தை வீடு சீவலப்பேரில் உள்ளது. அப்போதே வீட்டோட மாப்பிள்ளையாக வந்ததால் அந்த வீட்டிலேயே இறுதிவரை பாரதியாரின் தந்தை இருந்தார் என்பதுதான். இவ்வாறு வரலாற்றை மீளாய்வு செய்து கேட்கும்போது உண்மையான வரலாறு நமக்குத் தெரிய வருகிறது.
தமிழை தமிழ் படித்தவர்கள் மட்டுமல்லாது பொறியியல் படித்தவர்களும் தமிழ் இலக்கிய உலகுக்கு சேவை செய்வது போலத்தான்..சலபதியும் வணிகவியல் படித்து வரலாற்று துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆய்வு நூல் விளங்குகிறது.
நூலின் துவக்கத்தில் 1908 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் உச்சகட்டமாக மார்ச் 12ஆம் தேதி வ உ சி சுப்பிரமணிய சிவாவும் பத்மநாப அய்யங்கார் கைது செய்ததை அடுத்து..ஊரில் நடைபெற்ற எழுச்சிகளை விவரிக்கும் விதமாக இருக்கிறது. இதனை அரசாங்க அலுவலகத்தில் ஆவணங்களிலும் திருநெல்வேலி கலகம் என்று குறிப்பிடப்படுகிறது. மக்கள் எழுச்சி என்ற போது வெள்ளையர் தமக்கும் அதிகாரத்தின் கிளர்ச்சியாகவும் கண்டமையால் கலகம் என்றே வருணித்தனர். ஆனால் எழுச்சி என்பதே மிகவும் பொருத்தமானது என்று கூறுகிறார் ஆசிரியர்.
இந்த எழுச்சியின் பின்னால் சுதேச இயக்கத்தில் இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்றது. தமிழகத்தில் அப்போது அமைதி பூங்காவா இருந்தது அடுத்து சுதேசி இயக்கம் வந்தபின் தான் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன.
வ உ சி யோடு இணைந்து சுப்பிரமணிய சிவாவும் வந்தது அந்தப் பகுதி மக்களிடையே புது உத்வேகத்தை தந்தது. பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது கருத்தாழமிக்க உரைகள் மக்களை சிந்திக்க தூண்டின. அதோடு கப்பல் கம்பெனியும் ஆரம்பித்தது அன்றைய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. தூத்துக்குடியில் தடை மீறி போராட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அறிந்த வின்ச் அவர்கள் வ.உ.சிக்கு மிரட்டல் விடுத்தார். ஆயினும் மிரட்டலுக்கு பணியாத நிலையில் அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆயினும் பிணை வழங்க மறுத்தாலும் பத்மநாப ஐயங்கார் மட்டும் விடுதலை ஆனார். ஜூலை 7ஆம் தேதி வ உ சிக்கு இரட்டையாளர் தண்டனையும் சிவாவுக்கு 10 ஆண்டு விதித்தது.
மறுநாள் ஊரில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர் இந்து கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும்.
காவல் நிலையத்தில் சென்று வந்தே மாதரம் முழங்கியவாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மருத்துவ நிலையத்தை முற்றுகை இட்ட சிலரையும் கைது செய்தனர்.மின் கம்பிகள் அறக்கப்பட்டன.தெருவிளக்கு ஏறத்தாழ அனைத்தும் உடைக்க பட்டன. எல்லாம் காரணம் வ உ சி ஏற்படுத்திய எழுச்சிகரமான பேச்சை கேட்டு மாணவர்கள் பலரும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாய் பங்கு கொண்டதே ஆகும். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இருந்ததாக செய்திகள் தெரிகிறது தச்சநல்லூரிலும கிளர்ச்சிகள் தொடர்ந்தவாறு இருந்தன.
வணிகர்கள் அனைவரும் கடைகளை அடைத்து விட்டு நெல்லைக்கு வந்து தூத்துக்குடி வணிகர்கள் கடைக்காரர்களை கடைகளை மூடுமாறு தூண்டியதே துவக்க புள்ளியாக அமைந்ததாக சொல்கிறார். அன்றைய நெல்லை மாவட்டத்தில் மொத்தம் இருந்த ஐரோப்பியர்கள் 397 பேர் மட்டுமே .இங்கிருக்கும் மக்கள் எழுச்சி தொடர்ந்து நிகழ்ந்தால் என்ன செய்வது என்று அதிகாரிகள் கையை பிசைந்தனர்.
ஆனாலும் கிளர்ச்சிக்குப் பிறகு கைது செய்வோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. திருநெல்வேலி 57 பேரும் தூத்துக்குடியில் 36 பேரும் கைதாக 27 பேர் தண்டனை அடைந்தனர். எழுச்சியை கட்டுப்படுத்த உதவிய போலீசாருக்கு பரிசுகளையும் அரசாங்கம் வழங்கியது.
திருநெல்வேலி கஷ்ட நிவர்த்தி நிதியை திரட்டுவதற்கு அனைவரும் மயன்றனர் அதில் வந்த தொகையையும் முக்கிய பிரமுகஸ்தர்கள் அனுப்பிய நன்கொடையும் அது தெளிவாக விரித்துள்ளார். கலகத்தை தொடர்ந்து வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றது கழகத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் தண்டனை கிடைத்தது. வழக்கின் முடிவில் 32 பேர் எழுச்சிக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆனவர்கள் கலவரத்துக்கு முழு முதற்காரணம் வ.உ.சி.எம் சுப்பிரமணிய சிவாவும் என்ற குற்றம் சாட்டப்பட்டனர் நீதிபதி. இதில் முதலாதவர் ஏட்டு குருநாதய்யர் அவரின் பின்புறம் என்ன என்பதையும் விரிவாக ஆய்வு செய்கிறது. அவருக்கு ஏழு ஆண்டுகள் நாடு கடத்தல் தண்டனை விதிக்கப்பட்டது. இவரின் வரலாற்றை அறியும் போது மிகவும் வியப்பாக இருந்தது.
அதேபோல லோகநாத ஐயர் சங்கரநாராயண அய்யர் சங்கரநாராயணன் பிள்ளை மற்றும் சிறை கைதிகள் பற்றியும் இந்த நூல் விரிவாக பேசுகிறது. .பொதுவாக கைதானவர்களை பற்றி மட்டுமே பேசாமல் கைதுக்கு பின்புலமாய் யார் இருந்தார்கள் என்பதை குறித்தும் ஆய்வு செய்கிறது. வ உ சிக்கு ஆதரவாக எதிராக ஆஜரான வக்கீல்கள் அவர்களின் சம்பளத்தொகை முதல் கொண்டு என்ன ஒவ்வொரு நாளையும் விவரிக்கிறது.
தமிழகத்தில் இப்படி ஒரு எழுச்சியா என்பது மற்ற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கவும் அளவிற்கு திருநெல்வேலியில் இருந்தது என்று கூறுகிறார். ஆறு மாதத்திற்குப் பிறகு லாலி கவர்னர் நெல்லை வந்தார். அதற்குப்பின் தண்டகாவல்படை விளக்கிக் கொள்ளப்பட்டது. தண்டக்காவல் படை என்பது குற்றச்செயலில் ஈடுபட்டால் அல்லது கிளர்ச்சி செய்தால் மொத்த ஊரையுமே குற்றவாளியாக கருதி கூட்டு தண்டனை விதிப்பது இதுவாகும்.
இச்செய்திகள் எல்லாம் சுதேசி,இந்து நாளிதழ் விரிவாக பதிவு செய்தனர். பாரதி நடத்திய இந்தியா இதழ் சுதேசி இயக்கத்தின் அரிய கருவூலமாக சலபதி கூறுகிறார்.
வ உ சி யின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பது ஒரு கதாநாயகனுக்கு உரிய அம்சத்தோடு விவரிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியை கண்டு செய்திகளை கேட்டதும் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வைத்ததும் அறிய முடிகிறது. தம்மோடு சேர்ந்து சிறை கைதிகள் அதிகம் வருவதுகண்டு கவிதை நடையிலேயே வீரமிக்க பாடல்களை சொல்லி இருக்கிறார். அதன் பின்பு கடித போக்குவரத்து மூலம் சுதேச இயக்க நிலைப்பாட்டினையும், குடும்பத்தாரின் எண்ணங்களையும், மற்றும் உள்ள தலைவர்களின் நிலையும் அறிந்து கொள்ள உதவியது.
இந்த எழுச்சி ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன கிடைத்த விடுதலை உணர்வு என்ன, மக்களின் மனதில் தோன்றிய கருத்துக்கள், மக்களின் கைதுகள், ஆங்கில அரசின் திட்டங்கள் என்பனை பற்றி எல்லாம் விரிவாக இறுதி அத்தியாயத்தில் பேசுகின்றது. கரூரில் திருவனந்தபுரத்திலும் இந்த எழுச்சி ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன தெரிய வருகிறது. அதை தொடர்ந்து திலகரும் சில மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டபோது, ரஷ்ய புரட்சியாளர் லெனின் உடன் கடிதப் போக்குவரத்து நடைபெற்றதும் அறிய முடிகிறது.
வ உ சி யும் சுப்பிரமணிய சிவாவும் விடுதலை ஆன பின்பு அவர்களை முடக்கி போட்டு விட்டது. காந்தி யுகத்தின் எழுச்சி சுதேசி இயக்க பல அரசியல் செயல்பாட்டாளர்களை நிலைகுலைய வைத்தது. பலர் காந்தி வழிக்கு திரும்பியதால் இவர்களால் தொடர்ந்து இயங்க இயலாமலும் போய்விட்டது.
அதன் பின்பு வந்தவர்களும் திருநெல்வேலியில் எழுச்சியை பற்றி தொடர்ந்து கொண்டு செல்ல இயலவில்லை இவை வெற்றியா தோல்வியா என்ற கருத்து மட்டும் கேள்வி மட்டும் எஞ்சி நிற்பதாக சொல்லி இருக்கிறார். ஆனாலும் இந்த திருநெல்வேலி புரட்சி தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அகில இந்திய அளவில் பேச வைத்தது. துவக்க நிலையிலேயே இந்த எழுச்சி மக்களிடையே தன்னம்பிக்கை வளர்த்தது. தமிழகத்தின் தென்பகுதியில் இதன் தாக்கம் அதிகம் இருந்ததை உணர முடிகிறது.
ஆய்வு நூலுக்குரிய அத்தனை அம்சங்களும் இருக்கிறது. ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் இது எங்கிருந்து எடுக்கப்பட்டது, இதன் ஆய்வு நூல்கள் என்னென்ன என்பதையும ,பிற்சேர்கை நூல்கள் எவை என்பதனையும் அறிய முடிகிறது. விரிவான ஆய்வு பார்வை இருந்தால் மட்டுமே இது போன்ற நூல்களும் வரலாற்று உண்மைகளையும் மீண்டும் படிப்பது சாத்தியமாகும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment