அந்த விடுபட்ட உணர்விலிருந்துதான்,
இந்தச் செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு..
-ஆத்மாநாம்
No comments:
Post a Comment