Saturday, 20 August 2016

யாழிசை மணிவண்ணன்

கொம்பில்
வண்ணம் பூசிய பிறகும்
வண்டி இழுக்கத்தான் போகும் மாடுகள்
வந்து போகும்
நம் தேர்தலைப்போல..

#பாசி அடர்ந்த குளத்தில்
எறியப்படும் கல்லால் பிறக்கிறது
கணநேரத்து நிலவு..

# அடுக்குமாடிக் கட்டிடங்களில்
பிடுங்கி நடப்பட்ட நதி
செங்குத்தாய் வளர்கிறது..

# அயல்நாட்டு அகத்தியனின்
குடுவைக்குள் சிக்கிக் கொண்டது
குளிர்பானமாய் எங்கள் நதி..

-யாழிசை மணிவண்ணன்

No comments:

Post a Comment