கொம்பில்
வண்ணம் பூசிய பிறகும்
வண்டி இழுக்கத்தான் போகும் மாடுகள்
வந்து போகும்
நம் தேர்தலைப்போல..
#பாசி அடர்ந்த குளத்தில்
எறியப்படும் கல்லால் பிறக்கிறது
கணநேரத்து நிலவு..
# அடுக்குமாடிக் கட்டிடங்களில்
பிடுங்கி நடப்பட்ட நதி
செங்குத்தாய் வளர்கிறது..
# அயல்நாட்டு அகத்தியனின்
குடுவைக்குள் சிக்கிக் கொண்டது
குளிர்பானமாய் எங்கள் நதி..
-யாழிசை மணிவண்ணன்
No comments:
Post a Comment