Wednesday, 17 August 2016

பழனிபாரதி

தனிமையில் எரியும் இரவின் சாம்பல்
நுரைத்து ஓடுகிறது
யமுனையில் 

பிருந்தாவனத்தில் அலையும்
கைம்பெண்ணின்
பெரு மூச்சுகளை வாங்கி 
குழலூதுகிறான்
பச்சை மாமலையன்

நிறமற்ற நீரில்
நிர்வாணம் 
வண்ணப்பூவாகச் சுழல்கிறது

ஒரு காடு
வெந்து தணிகிறது

அவளது வெள்ளுடைகள்
மேகங்களாக
மிதந்து போய்க்கொண்டிருக்கின்றன

இதழ் தொட்ட கண்ணீரை
நாவால் வருடிச் சுவைக்கிறாள்
ஒரு துளிதான் என்றாலும்
போதும் என்பது போல

- பழநிபாரதி

No comments:

Post a Comment