ஒரு மனைவியின் டைரிக் குறிப்பு - கணவனுக்கு
....
நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன். குழந்தைகளையும் அழைச்சிட்டு போறேன். திரும்பி வர ஒரு வாரமாகும்.
1.நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு ஓட்டல் பில் எடுத்தேன்.
2.பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப நான் கண்டு எடுத்தேன்..
3.மூக்குக்கண்ணாடி ய அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது.
4.வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள மனப்பான்மையை காட்ட வேண்டாம்.
5.காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.
நம்ம பேப்பர்காரன் வேற மாதிரி.
பால்காரரும் சலவை செய்பவரும் அப்படியே.
6.உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும் குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு அன்கம்ஃபர்டபிளா இருந்தது ஆஃபீசுலன்னு புலம்பாதீங்க.
7.உங்க மருத்துவ ரிப்போர்ட் பர்பெக்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை.
8.என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே நாம அட்டன்ட் பண்ணியாச்சு. முடிஞ்சிடிச்சி. நடு ராத்திரில விஷ் பண்றேன்னு போய் தொல்லை பண்ணாதீங்க.
9.பத்து நாள் Wi-fy. கட் பண்ணிட்டு நிம்மதியா தூங்குங்க.
10.அப்றம் என் தோழிகள் எல்லாமே Out of station. .
11. கட்டக்கடேசியா ஒண்ணு.
ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம்.
நான் எப்ப வேணாலும் திரும்பி வந்துருவேன்.முன்னறிவிப்பில்லாம. !!!
கணவன்: என்னா வில்லத்தனம்...
No comments:
Post a Comment