சிந்தனை சிறுகதை....
ஒரு . .
சீடன் குருவைப் பார்த்துக்
கேட்டான் . .
குருவே . .
நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா. . ?
இல்லையே . .
தாராளமாகச் சாப்பிடலாம்
என்றார் குரு.
உடன் சீடன் கேட்டான்.
கூடவே ஈஸ்ட்
சேர்த்துக் கொண்டால்
அது தவறா குருவே. . ?
அதிலொன்றும்
தவறில்லை சாப்பிடலாம். .
மறுபடியும் சீடன் கேட்டான்
மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே. . ?
ஒரு . .
குறையும் இல்லை என்றார் குரு
அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான்.
இம்மூன்றும்
சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.
குரு . .
கேட்டார் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?
வலிக்காது குருவே என்றான்.
மேலும்
சிறிது நீரை ஊற்றினால். . ?
குரு கேட்டார்.
அதுவும் வலிக்காது குருவே என்றான். . !
குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?
என் . .
தலை பிளந்துவிடும்
குருவே என்றான்.
உன்
கேள்விக்கான
விடை கிடைத்து விட்டது
என்றார் குரு.
No comments:
Post a Comment