Friday, 26 August 2016

தேவதச்சன்

உயிர் பிரிவதற்கு எப்போதும்
ஒரு நிமிடம்தான் இருக்கிறது
மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு
துயரத்தில் சாய்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.
இருட்டு, பயம், திகைப்பு, இவற்றின்
இருண்ட சரிவில் உருள்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.
இவ்வொரு
நிமிஷத்தில்
அண்டசராசரம் ஆடி
ஒரு நிமிஷம்
வளர்ந்து விடுகிறது.
              -தேவதச்சன்

No comments:

Post a Comment