Tuesday, 16 August 2016

படுக்கையறையில் -வைரமுத்து

படுக்கையறையில்...

எழுதுகோல்
தொலை பேசி
எதுவும் வைக்காதே

உன் சுத்தமான சுதந்திரம்
அந்தச்
சுவர்களுக்குள்ளேதான்
````````````````````````````

அறிவாளியாய் இரு
முட்டாளாய் நடி
````````````````````````````

கன்னக்குழி
அழகென்று
பெண்ணைப்
புகழாதே

அதுவே
உன் சவக்குழியாய்
இருக்கலாம்
```````````````````````````

சாப்பாட்டு மேஜையும்
கட்டிலும்
தொடமுடியாத
தூரத்தில் இருக்கட்டும்

அந்த தூரம்
உன் ஆயுளின் நீளம்
````````````````````````````

தும்மல் காதல்
இரண்டையும்
வெட்கப்படாமல்
வெளிப்படுத்து

அடக்கினால்
வேண்டாத இடத்தில்
வெளிப்பட்டுவிடும்
````````````````````````````

வாய் நீராடும்
வாய்ப்புள்ள
போதெல்லாம்
சுட்டுவிரல் கொண்டு
தொட்டழுத்து ஈறுகளை

பரவும் ரத்தம் பலம்

ஈறுகெட்டால்
சொல் எஞ்சும்

ஈறு கெட்டால்
பல் எஞ்சுமா?
````````````````````````````

புதுமனைவியின்
தாய்மை

புதுத்தொழிலில்
லாபம்

இரண்டையும்
மூன்றாண்டு
எதிர்பாராதே
````````````````````````````

மாட்டுவால் சூப்
மன்மத பானமாம்

துரும்பும் அதனால்
இரும்பாய் மாறுமாம்

இப்போது புரிகிறது

மாடு பிடித்தவனுக்கே
மணமகள் ஏன் என்று
`````````````````````````````

எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்

தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று
``````````````````````````````

நாய் குரைத்தால்
ஓடாதே

அச்சப்படல்
நாய்க்கு
அழைப்பு மடல்

எளியதன் பலவீனம்
வலியதன் பலம்

-வைரமுத்து

No comments:

Post a Comment