Thursday, 5 January 2017

ஜெயமோகன்

*எது நல்ல கதை?
*ஜெயமோகன்*

💥ஒரு கதை வாசகன் மனத்தில் மேலும் வளர வேண்டும். எழுத்தில் இருப்பதை விட வாசகன் கற்பனைசெய்து அடைவதற்கு நிறைய இருக்கவேண்டும். அதுவே நல்ல கதை, அதற்காகவே ’வாசக இடைவெளி’ என்ற ஒன்று இலக்கியத்தில் விடப்படுகிறது.

ஆசிரியர் சொல்லாத, வாசகன் ஊகித்துக்கொள்ளக்கூடிய மௌனங்கள். அவற்றைச் சிறப்பாக உருவாக்குவதே நல்ல கலையின் நுட்பம்.

💥நல்ல கதைகள் வாழ்க்கைமேல் ஒரு விசாரணையை முன்வைக்கின்றன. அந்த விசாரணையில் நேர்மையாக இருக்கின்றன.

ஒரு கருத்தைச் சொல்ல வாழ்க்கையை செயற்கையாக சித்தரிப்பதில்லை. உங்களை மகிழ்விப்பதற்காக எதையும் உருவாக்குவதில்லை.

💥எது வாழ்க்கையோ அதை ஆசிரியனின் அக அனுபவத்தை ஒட்டி அவை முன்வைத்து மேலே சிந்திக்கும்படி உங்களிடம் கோருகின்றன.

-ஜெயமோகன்.

No comments:

Post a Comment