Friday, 20 January 2017

தவணைக் கறி

தவணைக் கறி

வங்கிக் கடனில் முளைத்த பயிர்கள்
தப்பியப் பருவமழையில் கருகின
சருகை மென்று சப்புக்கொட்டிய கால்நடைகள்
சரளைக் கல்லையும் மெல்லுகின்றன
இடையிடையே கானலைக் குடிக்கும்
மொடக் மொடக் சத்தம்...
சதுரங்கக் கட்டங்களாகப் பிளந்த நிலத்தின் மீது
தாவித்தாவி தவணை வசூலிக்கும் லத்திகள்.
வெடித்த நிலத்தில் 
ஒளிந்த வெளுத்தக் கோவணங்களைக்
கூடிக் கொறிக்கும் வெள்ளெலிகள்
மண்வெட்டியைப் பிளந்து குளிர்காய்கின்றன.
மக்கும் குப்பைகளும் மக்காத குப்பைகளும் கொட்டிப் பிளந்த அக்குழி மேல் பொழிகிறது
செல்லாப் பணங்கள் கரைந்த
மரக்கூழ்.

- பச்சோந்தி

No comments:

Post a Comment