Wednesday, 11 January 2017

ஒளவை

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
பிறருக்குத் தராமல் கருமிகள் சேர்த்துவைக்கும் செல்வத்தைத் திருடர்களே கவர்ந்துகொள்வார்கள்

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊர் மக்களோடு ஒருவர் பகைமை கொண்டால் அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் அழிவார்கள்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
கணிதமும் அறநூல்களும் ஒருவரின் இருகண்களைப் போன்ற பெருமையை உடையவனாகும்

ஏவா மக்கள் மூவா மருந்து
தாங்கள் சொல்லாமலேயே குறிப்பை உணர்ந்து செய்யக்கூடிய பிள்ளைகள் பெற்றோருக்கு அமுதம் போன்றவர்கள்

ஐயம் புகினும் செய்வன செய்
பிச்சை எடுக்கவேண்டிய நிலை வந்தாலும் நற்செயல்களைச் செய்யவேண்டும்

ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
பிறர் வளர்ச்சியைக்கண்டு பொறாமையால் பேசுவது ஏற்கனவே பெற்றுள்ள செல்வத்தையும் அழித்துவிடும்

- கொன்றை வேந்தன்
அறிவுப் பெருமாட்டி ஔவை

No comments:

Post a Comment