கலீல் ஜிப்ரான் கவிதைகள் - மணலும் நுரையும்
ஒரே ஒரு முறை தான்
பேச்சற்றுப் போனேன் நான் .
அது
'நீ யார்' என ஒரு மனிதன்
கேட்ட போது!
******
இந்த
அதிசய ஏரியில்
கூழங்கள்ளான என்னைக்
கடவுள் எறிந்த போது
கணக்கற்ற வட்டங்களால்
ஏறிப் பரப்பின் மீது சலனப்படுத்தினேன்.
ஆனால், ஏரியின் அடி ஆழத்தை
நான் அடைந்த போது
சனலமற்றவனாகிப் போனேன்!
******
என்
ஆன்மாவும் அங்கமும்
ஒன்றோடொன்று
காதலித்துக்
கடிமணங் கொண்ட போது
நான் இரண்டாவது பிறப்புற்றேன்!
*****
நினைவு கொள்வதே
சந்திப்பின்
ஒரு வடிவமாகும்.
***
மறதி
ஒரு வகையான
சுதந்திரமே!
****
இரவின் பாதையைப்
பாதுகாத்து வைத்து, ஒருவன்
விடியலை
அடைந்து விட முடியாது.
****
மண் மீது தூங்குவோர்
கனவுகளை விட
பஞ்சனை மீது தூங்குவோர்
கனவுகள் அழகாயில்லாத போது,
நான் வாழ்கையின் நதி மீது
எவ்வாறு நம்பிக்கை
இழக்க இயலும்!
***
என் துன்பத்தின்
ஒரு பகுதியே
சில இன்பங்களின் மீதான
ஆசை
என்பது தான் விசித்திரம்!
***
மனிதனின் முக்கியத்துவம்
அவன்
எதை அடைகிறான்
என்பதில் அல்ல;
எதை அடைய அவன்
முயல்கிறான்
என்பதில் தான்!
***
வாழ்க்கை
தனது நெஞ்சின்
கீதம் பாடும்
பாடகியைக்
காணாத போது,
அது தனது
மனதைப் பேசும் ஒரு
தத்துவ ஞானியைத்
தயாரிக்கிறது!
***
உண்மை என்பது
எப்போதும்
அறியப்பட வேண்டியது;
சில போது
வாய் விட்டு உரக்கச்
சொல்லப்பட வேண்டியதாகும்!
***
நம்மிடம் இருக்கும்
உண்மையான இயல்பு
அமைதியாய் இருக்கும்!
நம்மால் முயன்று
அடையப்பட்ட ஒன்று
வளவளவெனப்
பேசிக் கொண்டிருக்கும்!
***
ஒவ்வொரு விதையும்
ஒரு விடாமுயற்சியின்
உந்துதல்!
***
உண்மையைக் கண்டறிய
இருவர் தேவை;
ஒருவர்
உரக்கச் சொல்வதற்கும்
மற்றொருவர்
உணர்ந்து கொள்வதற்கும்!
***
சித்தாந்தங்கள்
சன்னல் கண்ணாடி
போன்றவையே;
அவற்றின் வழியே
உண்மையைப் பார்க்கிறோம்.
ஆனால் அது நம்மை
உண்மையிடமிருந்து
பிரித்து வைக்கிறது.
*****
உனது தீச்செயல்களால்
பாதி குற்றம் புரிந்தவராய்
எவனொருவன் உணர்கிறானோ......
அவனே
உண்மையான நீதிபதி!
******
பெண்ணின்
சிறு தவறுகளை
மன்னிக்காத ஆண்கள்
ஒருபோதும்
அவர்களது
பெருமை குணங்களை
அனுபவிப்பதில்லை.
******
பெண்களில் பலர்
ஆணின் இதயத்தைக்
கடன் வாங்குகின்றனர்;
ஒரு சிலர் மட்டுமே
அதைத்
தமதாக்கிக் கொள்கின்றனர்
******
No comments:
Post a Comment