*நானுமென்னெழுத்தும் - நகுலன்*
நின் கைவசம்
என் கைப்பிரதி
"இதனையெழுது"என்றாய்
எழுதினேன்.
"இதனையழி" என்றாய்
"அழித்தேன்"
"இதனையிவ் வண்ணமெழுது" என்றாய்
சொன்னவண்ணமே செய்தேன்.
இதுவென்னூல்
இதுவென் பெயர்
இது வென்னெழுத்து
விமர்சனமும் விரைவில் வந்தது
"ஆ என்ன வெழுத்து," என்றாரொருவர்
"ஆ இதுவன்றோ வெழுத்து" என்றாரொருவர்.
என்எனழுத்தில் நானில்லை
என்றாலுமென் பெயருண்டு
எழுதியெழுதி அழித்தேன்
அழித்து அழித்து ஆளானேன்.
விமர்சகரும் சொல்லி விட்டார்
இல்லா ததையெல்லாம்
உண்டென்று
சொல்லி விட்டார்.
மாமுனி பரமஹம்ஸன்
அவன் மாபெரும் சீடன்
சொன்னான்
"மாயை யென்பது
மன்பதையனுபவம்"
மாயையென்னெழுத்து
மாமாயை
என் வாழ்வு
என்றாலுமென்ன
இது வென்னூல்
இது வென்பெயர்
இது வென்னெழுத்து.
No comments:
Post a Comment