*இனியவை நாற்பது*
*பூதஞ்சேந்தனார்*
*வெண்பா-25*
ஐவாய வேட்கை யவாவடக்கன் முன்னினிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கட் டீர்வினிதே
நில்லாத காட்சி நிறையின் மனிதரைப்
புல்லா விடுத லினிது.
☘ஐந்து வழியான் வருகின்ற ஆசையையும், பழைய பயிற்சி வயத்தால் அதன் நினைவையும் ஒழித்தல் இனிது.
☘கையினிடத்து நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாயிருப்பினும் கல்லாதவரை விடுதல் இனிது.
☘நிலையில்லாத அறிவினையுடைய நிறுத்துதலில்லாத மனிதரைச் சேராது நீங்குதல் இனிது.
No comments:
Post a Comment