Thursday, 26 January 2017

அறிவுமதி

கவிஞர் அறிவுமதி:

நான் மருத்துவமனையில் சேர்கிறேன் என்று இணையத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு
ராகவா லாரன்ஸ் வெளியேறுகிறார்..

முதல்வருக்கு நன்றி என்று கடிதம் கொடுத்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியேறுகிறார்..

கொடிய மிதிக்கறாங்க, கோக்கைத் திட்டறாங்க என்று திகிலடைந்து  ஆதி வெளியேறுகிறார்

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. மூணு மாசம் தள்ளி வைப்போம் என்று
அந்தப் பெரிய மனிதர்களும் வெளியேறுகிறார்கள்..

எல்லாம் நேற்று மாலை  ஓரிரு மணி நேரத்தில் நடக்கிறது..
உள்ளே இருந்த தன் பிள்ளைகளை வெளியேற்றிய அரசு இன்று நம் பிள்ளைகளை அடிக்கிறது..

இவர்கள் சொல்கிறார்கள்
'மாணவர்களுக்குள் அந்நியர்கள் ஊடுருவிவிட்டார்கள்..அதனால் வெளியேறினோம்...

ஆறு நாட்கள் மாணவர்களின் போராட்டக்களத்தில்
உள்ளே இருந்த இந்த சமரச சன்மார்க்கவாதிகள் எந்தக்கல்லூரிகளில் படிக்கிறார்கள்...?!

மாணவர்களைத் தீவீரவாதிகளாக்க உங்கள் எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த கதைகளைச் சொல்லும் நல்லவர்களே..
'அடிக்கப்போறாங்க ஓடிருங்க.. 'என்று உங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை
ஆறு நாட்கள் உங்களோடு உண்டு உறங்கிய
எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே..?

பல போராட்ட வலிகளை உணர்ந்தவர்களுக்கு தான்  தெரியும் சக போராளியின் வலி...!

No comments:

Post a Comment