Wednesday, 25 January 2017

படித்ததில் பகர்ந்தது

நன்றி: ரவிக்குமார்

நீங்க எப்படி இவ்வளவு எழுதுறீங்க?.. என்னாலயும் இப்படி எழுத முடியுமான்னு ஒரு நண்பர் கேட்டார்!! அவருக்கு சொன்ன பதில்....
1. முதலில் எழுத வேண்டும் என்று மனதார ஆசைப்படுங்கள்! ஆசைப்பட்டால் தான் எதையும் செய்யத் தோன்றும்!
2. எழுதுவதற்கு திறமை வேண்டும் தான்! ஆனால் எழுதி எழுதியே அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்... முடியும்!
3. எதை எழுதுவது? உங்கள் தின வாழ்வில் நடக்கும் அன்றாட சம்பவங்களையே எழுதலாம்! ஆனால் டைரி போல எழுதாதீர்கள் ஏனெனில் இதை நீங்கள் மட்டுமல்ல பலர் படிக்கப் போகிறார்கள்!
4. கொஞ்சம் கற்பனை கலந்து, வர்ணனை சேர்த்து எழுதினால் நலம்! எகா : நான் ரோட்டைக் கடக்க முற்படும் போது அந்தக் கார் வந்தது! இப்படி எழுதாமல், நான் ரோட்டைக் கடக்கும் போது அந்தக் கார் கமல் கவுதமியை முத்தமிட நெருங்கும் வேகத்தில் என்னை நெருங்கிக் கடந்தது!... இப்படி எழுதலாம்!
நீ என்ன பெரிய ஆளா எங்களுக்கு அட்வைஸ் பண்ற என்று நீங்கள் கேட்கலாம்! இது ஜஸ்ட் என்னுடைய எண்ணங்களே அறிவுரைகள் அல்ல! போலவே மேற்சொன்னவற்றில் பல சுஜாதா போன்ற பல ஜாம்பவான்கள் சொன்னது தான்! என்னைப் போல பலரும் எழுத வேண்டும் என்ற சின்ன ஆசையில் புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்காக சொல்கிறேன்! நன்றி!

No comments:

Post a Comment