நல்லவையோ, கெட்டவையோ… அற்பமோ, அற்புதமோ… அவ்வப்போது ஏதாவது கனவுகள் வந்துகொண்டு இருந்தால் நன்றாகத்தானே இருக்கின்றன! யாரோ பாடுகிற பாடல் மாதிரி, எங்கோ அசைகிற ஊஞ்சல் மாதிரி, வேப்ப மரங்கள் பூத்துக்கவிந்த வெளியூர் ஒன்றின் அடையாளமற்ற தெருவில் உள்ள வீட்டுக்குள்ளிருந்து மிகுந்த சந்தோஷத்துடன் இரண்டு, மூன்று பெண்கள் சிரிக்கிற மாதிரி, பழைய குற்றாலம் அருவித் தெறிப்பில் எட்டிப் பிடிக்கிற உயரத்தில் தெரிந்த வானவில் மாதிரி, கலைந்து கலைந்து வலசை போகிற பறவைகள் மாதிரி, பரண் மேல் கிடக்கிற கால் உடைந்த ஆடு குதிரை மாதிரி, எல்லாம் சட்சட்டென்று நம்மை நம்முடைய அன்றாடங்களில் இருந்து விலக்கிக்கொண்டு போகிற இந்தக் கனவுகளை நாம் எதற்கு ஒளித்துவைக்க வேண்டும்?
-வண்ணதாசன்
Tuesday, 10 January 2017
வண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment