கற்கை நன்றே-33
*மணி
அதியமான் போர்க்களத்தில் பகைவரோடு போரிட்டுக் கொண்டிருக்கும்போது.. தனக்கு புதல்வன் ஒருவன் பிறந்திருக்கிறான் எனும் செய்தி தெரிவிக்கப்பட்டது. புதல்வன் பிறந்தவுடன் தந்தை வந்து பார்த்து மகிழ வேண்டும் என்பதே அறநூல் விதி. ஆகவே அதியமான தன் புதல்வனை பார்க்க வருகிறார். அதனை அவ்வையார் இவ்வாறு வர்ணிக்கிறார்.
அதியமான் போர்க்களத்தில் இருந்து நேரே அந்தப்புரம் வந்தான். போர்க்கோலத்தை கூட களையவில்லை. அவன் கையில் வேல், காலில் கழுத்தில் ஈரம் காயாத காயம், பகைவர்களோடு போரிடும்போது அவன் கொண்டிருந்த கோபமும் முகத்தில் இருந்து மாறவே இல்லை.
செறுவர் நோக்கிய கண்தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே
இந்த வர்ணனை அதியமானை ஒரு சிறந்த போர் வீரனாக காட்டுகிறது. ஆனால் ஒரு சிறந்த தந்தையாக காட்டவில்லை. குழந்தையை பார்த்தால் யாருடைய மனமும் மென்மை அடையும். ஆனால் தன் சொந்தக் குழந்தையை பார்த்த அதியமான் போரின் போது ஏற்பட்ட கோபம் தனியாமல், கண்ணில் சிவப்பு மறையாமல், அதே கோபத்தோடு இருந்தான். அதியமான் தன் புதல்வனை பார்த்து தந்தையாக மாறவில்லை போர்வீரராகவே இருந்தார்.
எரிமலையில் பூக்கள் எப்படி மலரும்? நம்மில் பலர் இப்படி இருக்கிறோம். அலுவல் செய்யும் இடத்தில் இருப்பது போலவே வீட்டிலும் அதிகார தோரணையோடு கெடுபிடிகளுடன் நடந்து கொள்கிறோம். என்று கவிக்கு அப்துல் ரகுமான் ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார்.
காலையில் படித்த இந்த வாசகங்கள் மனதில் ஏனோ தொட்டது. உலகமே ஒரு நாடக மேடை. ஒவ்வொருவருக்கும் மனிதன் நடித்து தான் ஆக வேண்டும். ஆனால் நெருங்கியவரிடத்தில் நடிக்க கூடாது. உண்மையாக மனதின் படி நடக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற வரி நமக்குச் சொல்லப்படுகிறது
இனிய காலை
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment