பண்டைய உலக அதிசயங்களில் ஒன்று பாபிலோனிய தொங்குதோட்டம் (Hanging Gardens of Babylon). இன்றைய இராக்கில் அமைந்திருந்தது. அது பாபிலோனிய மன்னர் நெபுகட்நெசரின் சொந்த தோட்டம்.
பாராடைஸ் என சொர்க்கத்தை குறிப்பிடுவதுண்டு. பாரசிக மொழியில் தோட்டத்துக்கு pairi-daêza என பெயர். அந்த சொல் கிரேக்க மொழியில் புகுந்து ஆங்கிலத்துக்கு வந்து பாரடைஸ் என்றால் சொர்க்கம் என ஆனது
பாரசிகர்கள் தோட்டங்கள் மேல் பைத்தியமாக இருப்பவர்கள். பெர்சியன் கார்டன் என்பது அத்தனை புகழ் பெற்ற கலைவடிவம். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதன் மன்னர் சைரஸ் காலத்தில் இருந்து அரண்மனையில் தோட்டம் வளர்ப்பது வழக்கம் என்றால் பார்த்துக்கலாம்
இவர்களின் பாதிப்பில் தான் முகலாயர்களும் பின்னாளில் முகல் கார்டன் என்ற பெயரில் தோட்டன்களை அமைத்தார்கள்
படத்தில் இரானின் கெர்மான் நகரில் இருந்து ஆறு கிமி தொலைவில் இருக்கும் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட ஷாஸ்தே தோட்டம் (Shahdez Garden). இது 19ம் நூற்றாண்டில் அமைக்கபட்டது. இதற்கான நீர் ஆறு கிமி தொலைவுக்கு எந்தவித மோடட்ரும், பம்பும் இல்லாமல் அருகில் உள்ள கெர்மான் நகரில் இருந்து பண்டைய தொழில்நுட்பம் மூலம் புவியீர்ப்பு விசையை பயன்படுத்தியெ கொண்டுவரப்படுகிறது.
2500 ஆண்டுகளுக்கு முன்பும் மன்னர் நெபுகட்ன்நேசரும் தன் பாலிலோனிய தொங்குதோட்டத்துக்கு இம்முறையை பயன்படுத்தி தான் நீரை கொண்டுவந்தார்
பாரசிகர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விசயங்களில் ஒன்று
#பூமியும்_வானமும்
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment