புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் செஸ்டர்டன் லண்டன் வாசி. நெடுங்காலமாக அந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தவர்.
ஒருநாள் பயணம் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதை பார்த்து அவரது நண்பர் எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? என்று கேட்டார்.செஸ்டர்டன் லண்டனுக்கு என்றார். நண்பர் திடுக்கிட்டார். 'என்ன சொல்கிறீர்கள்'? நாம் லண்டனில் தானே இருக்கிறோம் என்றார்.
இல்லை உண்மையில் நான் ல்ண்டனுக்கு தான் போகிறேன். பாரிஸ் டோக்கியோ நியூயார்க் வழியாக லண்டன் போகிறேன். நெடுங்காலமாக லண்டனிலேயே இருக்கிறேன். அதனால் லண்டன் என்றால் என்ன என்று தெரியாமல் போய்விட்டது. லண்டனை நான் அறிய வேண்டும் என்றால் நான் கொஞ்ச நாள் அதை பிரிந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் பயணம் புறப்படுகிறேன். உண்மையில் நான் லண்டனுக்கு தான் போகிறேன் என்றார்.
"எது நம்மிடம் இருக்கிறதோ அதனுடைய அருமை நமக்குத் தெரியாது"
இனிய காலை
No comments:
Post a Comment