"கம்பஞ்சங்கு விழுந்து மாதிரியே, கண்ணுக்குள்ள நொழைஞ்சு உறுத்துறியே"
'குறுக்குச் சிறுத்தவளே' பாடலில் வருகிற குறிப்பிட்ட வரிகளைச் சிலர் இப்படி எழுதியிருப்பதைப் பார்த்தேன்...
உண்மையில் அது 'கம்பஞ்சங்கு' இல்லை.
கம்மங் கருதை விரல்களில் நெருடி, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதன் சொங்கு போனபிறகு அதை ஊதித் தின்பார்கள். அப்படி ஊதுகையில் அதன் உமி கண்ணுக்குள் நுழைந்தால் உறுத்தும். அதுபோல, உன் பிம்பம் என் கண்ணுக்குள் விழுந்து என் நெஞ்சை உறுத்துகிறது.
"கம்பஞ்சொங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழைஞ்சு உறுத்துறியே"
சீனிக்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடுவார்கள்
சோளக்கருதை உப்புப்போட்டு அவித்து உண்பார்கள்
உளுந்தங்களியைக் கிண்டிச் சாப்பிடுவார்கள்.
கேட்கையிலேயே தமிழ் மணக்கும் கிராமத்து உணவுகள்.
அடுத்த தடவை, பொருள் புரிந்து உச்சரிக்கும்போது வரிகளும் இனிக்கும்.
-சுதர்சன்
No comments:
Post a Comment