Friday, 10 March 2017

காடன்

கடற்கரையில்
நேற்றிரவு ஈரிதயங்கள்
பிரசவித்த
பெயர்களை அலைக்கைகள்
அழிக்கவில்லை
எனும்
உறுதியோடு புலர்ந்திருக்கலாம்
இவ்விடியல்..,

இந்த நாள் முழுமைக்கும்
நீங்கள்
புன்னகை பூத்திருங்கள்
உங்களை ஆசீர்வதிக்க...
இக்கோடை துச்சமென
துடித்து விழித்தெழக் கூடும்
எங்கேனும் ஓர் விதை...!!
🎯-------காடன்-----🎯

No comments:

Post a Comment