முதன் முதலில் சாப்பிட்ட மாத்திரை
*சின்ன வயசில் மாத்திரை சாப்பிட்டது நினைவிருக்கிறதா?
எனக்கு இருக்கு.1990 களில்
வீட்டிலிருக்கிற எல்லாரும் மாத்திரை சாப்பிடும்போது நமக்கும் ஆசையா இருக்கும்.ஆனால் உடம்பு சரியில்லைனு E.S.I -திருப்பூர்(அப்பாவின் கார்டில் வைத்தியம் பார்ப்போம்) போனால் டானிக் மட்டும் எனக்கு கொடுத்துட்டு மாத்திரை கொடுத்து ஏமாத்திடுவாங்க.
அப்புறம் திருநீலகண்டபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் குடல் புழு மாத்திரை போல தந்து விழுங்க சொன்னாங்க.ஒரே குதூகலம்.முதல் முறையா மாத்திரை சாப்பிடப்போறோம்னு.
மாத்திரை விழுங்குதல் ஒரு கலை.மாத்திரை போட்டு,தண்ணியோடு ஒன்றாய் வழுக்கிச்செல்லும்.அந்த கலை ரொம்ப நாளா பிடிபடவே இல்லை.முதல் முறை தண்ணீர் உள்ளே போன பிறகும் மாத்திரை தொண்டையில் நின்று கசந்து துப்பி, வாந்தி வருவது போல ஆயிற்று
*பின்பு ஒரு முறை மிட்டாய் வாயில் வைத்துக்கொண்டு,தண்ணீர் குடிக்கும்போது லாவகமாய் உள்ளே போனபோது கலை ஓரளவு பிடிபட்டது
*வெள்ளை மாத்திரை,மஞ்சள் மாத்திரை,காப்பி கலர் பிரவுன் மாத்திரை, பொடி உள்ளிருக்கும் ட்யூப் மாத்திரை.என பல வகை இருக்கும்.
*சில மாத்திரைகளை விழுங்கத் தெரியாமல் கடித்து விழுங்கி தண்ணீர் குடித்திருக்கிறோம்
*இதில் வீணான மாத்திரைகளை அம்மா, ஊதாங்குழலில்,நொறுக்கி தேங்காய் எண்ணெய்யில் நனைத்து, புண்ணுக்கு வைத்து விடுவார்.இப்பிடித்தால் தீயினால் சுட்ட புண்ணையெல்லாம் ஆத்துனாங்க
*இப்பவும் காய்ச்சல் வந்தால் ஒரு வேளை மாத்திரை மட்டும் வாங்குவாங்க மிடில் க்ளாஸ்.நோய் நாடி நோய்முதல் நாடி அளவோடு மாத்திரை வாங்கி விடல்
*நோய் சரியானவுடன் கவனிப்பாரற்று கிடக்கும் மாத்திரைகள் அதிகம்.
*காக்கி கவரில் டிவி மேலேயே,செல்ஃப் பில், பரணில்,பீரோ சந்தில், இன்னும் ஆச்சர்யமாய் பழைய தகர பெட்டிகளில்..
*நோய் வந்ததின் அடையாளமாய் இன்னும் நினைவு படுத்திக்கொண்டிருக்கும் மாத்திரைகள்
*ஒரு மாத்திரையே ஐயாயிரம்னு பக்கத்து வீடுகளில் பேசிக்கொள்ளும் போது அது வெள்ளக்கலரா,காப்பி கலரா, என யோசித்த காலம் உண்டு
*கண்ணதாசன், மருத்துவமனையில் நுழைந்ததும் மருந்துகளை பார்த்து மலைத்து பார்ப்பார்.மருந்தாளுநர் இத்தனை மருந்துகளா என பார்க்கிறீர்களா என்று.கவிஞர் சொல்வார்,மனிதர்க்கு இத்தனை நோய்களா என்று
*இன்று டிபாட்மென்ட் ஸ்டோர் போல பெருகி இருக்கும் மருந்தகங்கள் சொல்கிறது,
உடல் ஆரோக்கியத்தின் மனிதர்களின் புறக்கணிப்பை
*சகலமும் மாத்திரை மயமாகிவிட்ட சூழலில் மாத்திரையே திங்க தெரியாமல் வாழ்ந்த தலைமுறை நிச்சயம் ஆசிர்வதிக்கப்பட்டது
தோழமையுடன் *மணிகண்டபிரபு*
No comments:
Post a Comment