நன்றி:கணேஷ்குமார்
சுஜாதா, கணையாழி கடைசிப் பக்கங்களில் இவ்வாறு எழுதியுள்ளார்.
“ இப்பொழுது வெளிவரும் சினிமா பாடல்களை நூறு வார்த்தை ஒக்காபிலேரிக்குள் அடக்கி விடலாம்...
(உ-ம்) காமதேவன் , காதல் ராச்சியம் , தாகம் தீர்க்கவோ, பார்க்கவோ , கேட்கவோ ,பூந்தோட்டம் , நீங்காத ரீங்காரம் , ராஜ ராகம் , சங்கீதம் உன் பேச்சில், நாயகன் , நாயகி , மணமாலையை எதிர்பார்க்கும் பூங்கொடி இதயத்தின் சிறை , சொர்க்கங்கள் , கையோடு உறவாட வேண்டும்
இவ்வாறு ஒரு நூறு போதும் , இடையிடையே " ரிப்பாப்பா ரிப்பா ( ஆண் ) , லல்லல்லாலல்லா ( பெண் ), ம்ம்ம் , ஹ ஹ ஹா (ஆண் - பெண் ) போன்ற நல்ல தமிழ் வார்த்தைகளையும் செருகிக் கொள்ளலாம் . மொத்தத்தில் 96 சதவீதம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் பாடுகிறார், பாடல் நடுவே நக்கலாகச் சிரிக்கிறார் . எல்லாப் பாடல்களும் கேட்ட மூன்றாவது நிமிஷமே செத்துப் போகின்றன. “
0
சுஜாதா குறிப்பிட்டுள்ள அம்சங்கள் 80 களில் வெளிவந்த பல பாடல்களில் உண்டு ,
நக்கலாகச் சிரிக்கும் பாலாவை அவர் ரசிக்கவில்லையென்றால் அது சுஜாதாவின் ரசனைக் குறைபாடு !
சிறிய பறவை சிறகை இசைக்கத் துடிக்கிறதே - இந்தப் பாடலில் நக்கலாகச் சிரிப்பாரே பாலா .. அடடா
ரீப்பாப்பா - இது மேகம் கொட்டட்டும் பாடல்
அப்புறம் அந்த லல்லலா ஹம்மிங் , அது ஜானகி தான்.. .
80 களில் வெளிவந்த பாடல்களைத் தான் அதிகம் விரும்பிக் கேட்பேன் , அதுவும் குறிப்பாக இளையராஜா ..
பெண் தனிக் குரல் பாடலாக இருந்தால் ஜானகியையும் , ஆண் தனிப் பாடலாக இருந்தால் பாலாவையும் , ஜோடிப் பாடலாக இருந்தால் ஜானகி & பாலாவைத் தான் அதிகம் பயன்படுத்தினார். இளையராஜா..
ஒரு குங்குமச் செங்கமலம் , இளமனது பல கனவு , உயிரே உறவே , ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் .. தேவதை ஒரு தேவதை,
0
சில நாட்களுக்கு முன் ஹலோ FM இல்(106.4) சினிமாயணா நிகழ்ச்சியில் கங்கை அமரன் கூறினார் ,
“ எங்க அண்ணன மாதிரி மெட்டு போட்டுறலாம் , ஆனா Orchestration பண்ண முடியாது.”
0
கங்கை அமரன் சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு
இளையராஜா பாடல்களில் எந்தவொரு இசைக் கருவியின் இசையும் பாடலை விட்டுத் தனியே துருத்திக் கொண்டு ஒலிக்காது ,
நிழல்கள் படத்தில் இடம் பெற்ற தூரத்தில் நான் கண்ட உன்முகம்…
பல்லவி முடிந்து முதல் சரணத்துக்கு முன்னால் ஒலிக்கும் வயலின் உச்ச ஸ்தாயியை அடைந்து கிழே இறங்கும் சமயத்தில் அதே வயலின் இசையொடு ஒத்த குமரிகளின் கோரஸ் குரல்களை அழகாகக் கோர்த்திருப்பார் ராஜா !
இதே போல் பூந்தளிர் ஆட பாடலிலும் கோரஸ் குமரிகளின் குரல்கள் அட்டகாசமாக இருக்கும்
No comments:
Post a Comment