வாழ்க்கை உங்களை நொறுக்கும். அதிலிருந்து யாரும் உங்களைப் பாதுகாக்க முடியாது. தனியராக வாழ்வதும் தீர்வில்லை. தனிமை ஏங்கவைத்தே உடைந்து போக வைக்கும். காதலியுங்கள். உணர்வால் நிறையுங்கள். நீங்கள் பூவுலகில் பிறந்ததே அதற்குத் தான். இதயத்தை ஆபத்துகளில் அலைக்கழிக்கவே பூமியில் உயிர்த்திருக்கிறீர்கள். எதோ ஒன்று உங்களை முழுதாய் விழுங்கவே பிறந்துள்ளீர்கள். நீங்கள் உடைந்தோ, துரோகம் பரிசளிக்கப்பட்டோ, தனித்து விடப்பட்டோ, காயப்பட்டோ, மரண வேதனை அரிக்கையிலோ ஒரு கனி தரும் மரத்தின் கீழே உட்காருங்கள். மரத்தில் இருந்து கனிகள் பெருநிலம் நோக்கி விழுந்து தங்களின் இனிமையை வீணடிப்பதை காணுங்கள். என்னால் முடிந்த வரை வாழ்க்கையைச் சுவைத்து விட்டேன் என உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.
Louise Erdrich, The Painted Drum
*நன்றி சரவணன்
No comments:
Post a Comment