வாசிப்பை நிலைநிறுத்த..
-ஜெமோ
இன்று நம்மையறியாமலேயே வாசிப்பு பெருகியிருக்கிறது. மும்மடங்கு வாசிக்கிறோம். தொழிலுக்காக. கேளிக்கைக்காக
ஆகவே வாசிப்பு மேம்போக்கானதாக ஆகிவிடுவதை தடுக்கமுடியாது. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாசித்தது எதுவும் நினைவில் தங்காது. வாசித்ததை ஒட்டி நீங்கள் சிந்தித்தது மட்டுமே உங்கள் நினைவில் தங்கும்
ஆகவே வாசித்ததை எழுதி, பேசி சிந்தனைகளாக ஆக்கிக்கொள்ளுங்கள். தன்னிச்சையாக சிந்தனை ஓடுவதற்குப்பெயர் சிந்தனை அல்ல. அது எண்ணம்
சிந்தனை என்பது முறைமைபப்டுத்தி மூளையில் தொகுப்பது. அதற்கு பேச்சோ எழுத்தோ தேவை. அதைச்செய்யுங்கள். ஒருநூலைப்பற்றி நீங்கள் சிந்தித்து ஒரு கட்டுரை எழுதிவிட்டால், ஒரு குறிப்பை எழுதிவிட்டால் அது உங்களுடையது. அதை நீங்கள் கடந்தும் செல்லமுடியும். அடுத்த நூலுக்கு இயல்பாகச் செல்லமுடியும்
புத்தகங்களை முடிக்காமல் விடக்கூடாது என சபதம்செய்தாலொழிய பல நூல்களை முடிக்கமுடியாதென்பது உண்மை. காரணம் மூளையில் அடைசல்
வாசித்தவற்றை சீராக சிந்தனையில், தாளில் பதிவுசெய்யத் தொடங்கினால் மூளையில் நம்பமுடியாத அளவுக்கு இடமிருப்பதை உணரமுடியும்
ஜெ
No comments:
Post a Comment