Thursday, 2 March 2017

அ.வெண்ணிலா

சுக இருப்புக்காக
கால் மேல் உள்ள காலைக் கண்களால்
நெருடிப்போகாத
பார்வையைச் சந்தித்தவுடன்
சரியாய் இருக்கும்
முந்தானையைக் கூட
இழுத்துவிட்டுக்கொள்ளவைக்காத
குழந்தைக்குப் பாலூட்டும்
வினாடிகளில்...
தரைபிளந்து உள் நுழையும்
அரைப்பார்வை வீசாத
காற்றில் ஆடை விலகும்
நேரங்களில்
கைக்குட்டை எடுத்து
முகம் துடைத்துக்கொள்ளாத
ஆண்களுக்கு
நண்பர்கள் என்று பெயர்.
**** -அ. வெண்ணிலா

No comments:

Post a Comment