Wednesday, 22 March 2017

விமர்சனம்

கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது விமர்சனமே இல்லையா? இருக்கிறது.
தேசிய இனப் பிரச்சினையில் ஈழத்திற்கு ஓர் அளவுகோலும், பாலஸ்தீனத்திற்கு ஓர் அளவுகோலும் வைத்திருப்பது...
இந்திய சமூகத்தில் சாதியும் ஒரு முக்கிய பிரச்சினை என்பதை சுயபரிசீலனை செய்ய 70 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது...
இன்னும் 'பார்ப்பனர்கள், பார்ப்பனியம்' என்ற தமிழ் வார்த்தைகளுக்குப் பதிலாக, பார்ப்பனர்கள் நம் மீது திணிக்கும் 'பிராமணர்கள், பிராமணியம்' என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவது...
தீண்டாமை ஒழிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, சாதி ஒழிப்பிற்கும், இந்து மத ஒழிப்பிற்கும் கொடுக்காதது...
கம்யூனிசத்தையும், கம்யூனிசத் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி
யவர்களின் கருத்து சுதந்திரத்திற்காகப் போராடுவது; கருஞ்சட்டைத் தோழர்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படும்போது அமைதி காப்பது...
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியை காரில் அழைத்துவந்த, இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவோடு நட்பு பாராட்டிய இந்து என்.ராமை தனது மேடைகளில் ஏற்றுவது; காலமெல்லாம் தமிழ் மக்களுக்காகப் போராடும் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கருஞ்சட்டைத் தோழர்களைத் தள்ளி வைப்பது...
பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை 'வறட்டு நாத்திகம்' என்று விமர்சித்துவிட்டு, இதுவரை 'அறிவியல்பூர்வ நாத்திகத்தை' முன்னெடுக்காதது...
தொழிற்சங்க அணிகளை அரசியல்மயப்படுத
்தாமல் இருப்பது...
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நாடாளுமன்றத் தேர்தல் பாதையிலேயே முழுமையாகக் கரைந்துபோய், கட்சித் தோழர்களின் உழைப்பை வீணடிப்பது.
இந்த விமர்சனங்களில் ஒன்றிரண்டைத் தவிர மீதி அனைத்தையும் அல்லது இன்னும் கூடுதல் விமர்சனங்களையும் திமுக, அதிமுக மீது வைக்க முடியும்.
இந்த விமர்சனங்கள் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஊரார் சொத்தைக் கொள்ளையடித்து தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணமும், தங்களின் சக்திக்கும், புரிதலுக்கும் உட்பட்டு தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவார்கள் என்ற நம்பிக்கையும் என்னைப் போன்ற பலருக்கு இருக்கிறது. ஆனால், இந்த நம்பிக்கை ஒருபோதும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மீது வராது.

No comments:

Post a Comment