கொன்றை வேந்தன் **
# ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
பொருள்:
ஒருவன் தன் ஊராருடன் பகைத்துக்கொண்டால் அடியுடன் அழிந்துவிடுவான்.
விளக்கம்:
வேர் - ஆதாரம். மரம் நிற்க ஆதாரமாக இருப்பது வேர் ஆகும்.
நன்மனிதர்களை, தன் கருத்துக்களோடு ஒத்துவராததால் பகைத்துக் கொள்வோமேயானால், அவருடனான நட்பு கெடும். இருவருக்கும் இங்கு ஆதாரமாக இருப்பது நட்பு. அது போலவே, நம்முடன் சேர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கும் ஊரை நாம் பகைத்துக்கொண்டால், ஊருடனான ஒட்டுதல் கெடும். இங்கு ஆதாரமாக இருப்பது ஒட்டுதல்.
#எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
பொருள்:
அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை.
#ஏவா மக்கள் மூவா மருந்து.
பொருள்:
செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள், மூன்றுவகை நோய்களுக்கும் மருந்தாவர்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுவகை நோய்களே அனைத்துவித நோய்களுக்கும் மூலம்.
# ஐயம் புகினும் செய்வன செய்.
பொருள்:
ஐயம் - பிச்சை, பயம், சந்தேகம்.
பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்.
பயம், உன்னைப் பற்றிக் கொண்டாலும், நீ உன் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும்.
நாம் எடுத்துக்கொண்ட முயற்சியில், சந்தேகங்கள் உண்டானாலும் முயற்சியைக் கைவிடாமல், செய்யவேண்டியவைகளைச் செய்ய வேண்டும்.
#ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.
பொருள்:
'ஒருவனுக்கு ஒருத்தி' என்பதை மனதில் கொண்டு, ஓர் இடத்தை பூர்வீகமாகக் கொண்டு வாழவேண்டும்.
# ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
பொருள்:
வேதம் ஓதுவதை விட மிக நல்லது, ஒழுக்கமுடன் இருத்தல்.
# ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு.
பொருள்:
பொறாமைப் பேச்சு, வளர்ச்சியை அழிக்கும்.
#. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
பொருள்:
சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
No comments:
Post a Comment