Saturday, 4 March 2017

படித்தது

''ஒரு கதைக்கான ஆதாரத்தை விளையாட்டுத்தனமாக தேடிச்செல்கிற எழுத்தாளனல்ல நான். ஆதாரத்திற்காக நான் ஆழமாக தோண்டிச்செல்ல வேண்டியிருக்கிறது. என் ஆன்மாவின் இருண்ட பிரதேசங்களுக்குள் ஆழமாகத் தோண்டிச்சென்று அங்கே புதைந்திருக்கும் கதையை நான் கண்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காகவும் கூட என் உடல் நல்ல வலுவோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஓடத் தொடங்கிய பிறகு என்னால் நெடுநேரத்திற்கு மனதை ஒருமுகப்படுத்தியிருக்க முடிகிறது. மணிக்கனக்காக மனதை ஒருமுகப்படுத்தி இருட்டுக்குள் செல்லமுடிகிறது. இருட்டுக்குள் அப்படி போகும்போது வழியில் உங்களுக்கு எல்லாமே கிடைக்கின்றன. பிம்பங்கள், பாத்திரங்கள், உருவகங்கள். உடல் ரீதியாக நீங்கள் பலவீனமாக இருந்தால் அவற்றை தவறவிட்டு விடுவீர்கள். அவற்றை இருகப் பற்றிக் கொண்டு, உங்கள் பிரக்ஞையின் மேற்பரப்பிற்கு கொண்டுவரச் செய்ய உங்களுக்கு சக்தியிருக்காது. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது முக்கியமான விஷயம் என்பது, ஆதாரத்துக்குள் உங்களை தேடிக்கொண்டே செல்வதல்ல. இருட்டில் இருந்து திரும்ப மேலே வருவதுதான், ஓட்டத்திலும் இதே விஷயம்தான். ''

-'கதைகளுக்கான அகத்தூண்டல் உங்களுக்கு ஓடுவதால் கிடைக்கிறதா?' என்ற கேள்விக்கான 'ஹாருகி முரகாமி'யின் பதில்! ''அயல் மகரந்தச் சேர்க்கை' புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment