Friday, 10 March 2017

கவிதை

கர்ப்பம் தரித்த
பூனைக்கு
உணவாகின்றன
இன்னமும்
கண்விழிக்காத
குட்டி எலிகள்.

--

தலையில் கல்லைத்தூக்கிப் போடாது..
உறங்கும்போது பின்பக்கம் தடவாது..
விலகிய மாராப்பை உற்றுப் பார்க்காது..
நம்புங்கள்,
அமைதியாகப் படுத்திருக்கும்
பிணத்தினருகில் நீங்கள்
பயமின்றி உறங்கலாம்.

--

வாழையின் குழந்தை எது?
கன்றா?
குலையா?
ஐயன்மீர்,
வாழையடி வாழை என்று
எதைச் சொல்கிறீர்கள்?

--

எத்துனை சோப்பு போட்டுக்
குளித்தாலும்
அழுக்காகவே இருக்கிறது
பாத்ரூம்.

--

எட்டெட்டு எடை கொண்ட நான்
எட்ட விழுந்தேன் உன் கூந்தல் பட்டு
ஆம்
உன்
கூந்தல்
பட்டு.

--

#கெளம்பு காத்துவரட்டும் கவிதைத் தொகுப்பிலிருந்து..

No comments:

Post a Comment