Saturday, 17 July 2021

கற்பதுவே..பகிர்வதுவே-27*மணி




என் விருப்பமெல்லாம் எழுத்தைப் போலவே
என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும்
-பிரபஞ்சன்


#பிரபஞ்சனின் இறுதியாத்திரை
-கடற்கரய்


பிரபஞ்சன் குறித்து தான் சந்தித்த நாட்களையும் அனுபவங்களையும், இறிதிநாட்களில் அவரின் இழப்பையும் கூறும் சிறு நூல்தான் இது.எழுத்தாளர்களில் ஒரு சிலர். சீரியசானவர்கள்.தன்னைத் தவிர எல்லாரையும் ராயல் என்பீல்டில் போகிறவர் டி.வி எக்ஸ் எல்லில் போகிறவர்களை பார்ப்பது போல் அற்பமாய் பார்ப்பார்கள்.ஆனால் பிரபஞ்சனனின் பார்வை அப்படியதல்ல.எல்லாரையும் கனிவுடன் பார்க்கும் போதே அவரிடம் இன்னும் அதிகம் பழக வைக்கும், பேச வைக்கும்.

2009ம் ஆண்டு திருப்பூர் புத்தகத் திருவிழாவில் தான் அவரின் பேச்சைக் கேட்டேன். கடற்கரய் சொன்னதுபோல செகாவ் இருந்திருந்தால் கூட இவ்வளவு சுவாரஸ்யமாய் அக்கதைகளை சொல்லியிருக்கமாட்டார்.அவரின் வழியே அறிந்தவைகளை தான் மீன் கதை, குமாஸ்தாவின் கதை, புதுமைப்பித்தனின் மிஷின் யுகமும்.
இக்கதைகளை விமானம் தரை தளத்தை விட்டு மேல் எழும்புவதை போல மெல்ல வேகமெடுத்து உச்சத்தை அடையும் போது பார்வையாளனும் பிரபஞ்சனும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து ஒரே சிந்தனையும் இறங்கி வரவைப்பார். அவரின் கருத்துக்கு முற்றாக நம்மை ஒப்படைத்திருப்போம்.

"வாழ்நாள் முழுக்க மனம் ஒன்றை சொல்கிறது.வாழ்க்கை ஒரு பக்கம் இழுக்கிறது".என்ன செய்ய? என ஒரு இடத்தில் அவர் சொல்லும் போது ஒட்டுமொத்த வாழ்வின் பார்வையை நம்மையும் உட்படுத்த வைத்திருப்பார்.முதல் புத்தகம் வந்த போது நிகழ்ந்த சுவையான சம்பவத்தை சொல்லி ஆத்மாநாமின் மீது நமக்கும் அன்பை ஏற்பட வைத்திருப்பார்.

அறியாத தகவலாய் பிரபஞ்சன் புதுமைப்பித்தனைப் போல sheaffer பேனாவில் எழுதுவது மிகவும் பிடிக்கும் என்று சொல்லி டைப் அடிப்பதை விரும்பவில்லை ஏனெனில் எழுத்துக்கும் பேனாவுக்கும் இடையில் டைப் செய்யும் போது எந்திரத்தன்மை வருவதாய் சொல்லியிருந்த இடம் அருமை.அதே போல் ஒரு பூவை ரசிக்கும் போது நம் ரசனைத் தன்மை வெளிப்படுவதாய் கூறியதும்.


எந்தக் அணியிலும் இல்லாது தனிமையில் இருப்பது ஒரு மாபெரும் சுதந்திரம் என்று கூறியதுடன் நீங்கள் ஏதோ ஒரு அணியில் இருந்தால் அவர்கள் அழுக்கையும் நீங்கள் தான் சுமக்கணும் எனும் நிதர்சன உண்மையை உரைத்திருப்பார்.
இந்த ஜோல்னா பை நல்லாயிருக்கிறதென சொன்னவின் நடந்த நிகழ்வு நூலாசிரியருக்கும் பிரபஞ்சனுக்கு இடையில் ஒரு நிகழ்ச்சி நம்மையும் நெகிழ வைக்கிறது.பாரதி பூணூல் அணிவித்த கனகலிங்கம் குறித்த செய்தியும் சொல்லியதோடு.. பிரபஞ்சனின் இறுதிநாள் பயணத்தின் போது ஏற்பட்ட நினைவையும் கூறி புத்தகத்தை நிறைவு செய்திருக்கிறார். 


தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment