Monday, 12 July 2021

வண்ணநிலவன்

எனக்குத் தெரிந்து கண்ணதாசன், எடிட்டர் (சோ) இருவரும் டிக்டேட்தான் செய்வார்கள்.கண்ணதாசன் கவிதைகளை மட்டுமல்ல கட்டுரைகள்,தொடர்நாவல் எல்லாவற்றையுமே டிக்டேட் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.கண்ணதாசன் பத்திரிகைக்காக செப்பு மொழிகள் என்ற தொடரை டிக்டேட் செய்ததை நானே வாங்கி வந்திருக்கிறேன்.காரசாரமான அரசியல் கட்டுரைகளைக் கூட வாய் மொழியாகக் கூறுவதும், கவிதைகளை வாய்மொழியாகக் கூறுவதும் எளிதல்ல.போனில் கூட கவிதை சொல்லுவார்.

எடிட்டர் கேள்விகளுக்கான பதில்கள், தலையங்கம்,தொடர்கதை எல்லாவற்றையும் டிக்டேட்தான் செய்தார்.நாடகங்களை மட்டும்தான் கையால் எழுதினார்.

ஜெயகாந்தன் கதைகளை டிக்டேட் செய்ய தேவபாரதி எழுதுவார்.ஒருமித்த மனதும் மொழியறிவும் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை.

-வண்ணநிலவன்

No comments:

Post a Comment