கதாநாயகியை மையப்படுத்திய படம் என்பது சயின்ஸ் குரூப் எடுத்துப் படிப்பது மாதிரி.படிச்சா நல்லா மார்க் வரும் இல்லனா கடை கோடியில் கொண்டு போய் தள்ளிவிடும். இந்தப்படம் ரொம்ப கீழேயும் தள்ளாம உச்சத்தையும் தொடாமல் ஓரளவுக்கு இருப்பது ஆறுதல்.பில்டப், ஓபனிங் சாங் இல்லாததும் மகிழ்ச்சி. உருமாற்றத்தை மையப்படுத்தி இதற்கு முன் பொம்மலாட்டம் போன்ற படம் வந்திருந்தாலும்..இப்படத்தில் திரில் கூட்டி இறுதியில் சொல்லியிருக்கிறார்கள்
#கதை
சென்னைக்கு புதிதாக காவல் அதிகாரியாக பொறுப்பேற்க வரும் ஐஸ்வர்யா..பேருந்தில் நாயகன் சுபாஷ் செல்வத்துடன் ஒரே இருக்கையில் பயணிக்க வேண்டிய நிலை.இயல்பான பேச்சில் மனம் கவரும் ஐஸ்வர்யா மீண்டும் அவரை சந்திக்கிறார்.
இப்போது ஐஸ்வர்யாவின் சிறு வயது தோழி காணாமல் போன செய்தி வருகிறது.எங்கே சென்றார் என்ற க்ரைம் பார்வையுடன் நகரும் கதையில் இறந்துவிட்ட செய்தி கிடைக்கிறது.எந்த துப்பும் கிடைக்காமல் இருக்கும் போது பக்கத்து வீட்டிலும் ஒரு கொலை நடக்கிறது.எல்லோர் மீதும் செல்கிறது சந்தேகப்பார்வை. இறுதியில் என்ன ஆனது என்பதை
யூகிக்க முடியாத திருப்பத்துடனும் நெகிழ்வுடனும் சொல்லி முடித்திருக்கிறார்கள்
#டின்ஜ்
*படத்தின் ஆரம்பக் காட்சியில் இயல்பான சம்பவம் பொயட்டிக்காய் காட்டியுள்ளனர்.
*ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாய் இருந்தாலும் எல்லா நடிக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்
*இரவும் பகலும் கழுகுப்பார்வை ஒளிப்பதிவில் கவனம் ஈர்க்கிறார் கோகுல் பினாய்.இருபாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் சதீஷ் ரகுநாதன்
*புடிக்கிதோ புடிக்கலையோ நம்ம கூட இருக்கிற ஆடு மாடு மாதிரி நினைச்சிட்டு வாழ வேண்டியதுதான் என மணப்பெண் பேசுவது நச்
*சூர்யாவுக்கு நாயகிக்குமான முக ஒற்றுமை நன்று.
*படத்துவக்கம் முதல் அடுத்தடுத்த திரைக்கதை திருப்பம் கொடுத்து இறுதியில் விடை சொல்லியிருக்கின்றனர்
*இறுதிக்காட்சியில் வரும் நோக்கம் மொத்த குறைகளையும் மறக்க வைக்கிறது
*விடாது கருப்பு போன்ற சீரியல் பார்த்தவர்கள் ஹீரோதான் காரணம்னு யூகிச்சிடுவாங்க. மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்சாடர்னு படம் பார்த்தால் இறுதியில் வேறு காரணம்.நன்று
*மாற்றுத்திறனாளி கொல்ல வரும் போது நாயகன் சுபாஷ்க்கு பின்புறம் ஒரு பெண் தெரிவது ஆடியன்ஸ் கவனத்தை திசை திருப்பவா
*மின்விசிறியின் மேலுள்ள போன் திடீர்னு காணாமல் போனதை காட்டுவாங்க.ஆனா அதை எடுத்தது யார்னு சொல்லியிருக்கலாம். இறுதிக்காட்சி பார்க்கும் போது உதவி செய்த காவலர் புரிய முடியுது.ஆனால் அதை சொல்லியிருந்தால் அவர் மீது சந்தேகம் வந்திருக்கும்
*திருப்பத்துக்கு மேல திருப்பம் வருவதால் எதைச்சொன்னாலும் நம்பும் மனநிலைக்கு வந்துவிடுகிறது
*நாயகன் ஒரு வருசம் டைம் கொடுக்கிறார்.அவ்வளவு நாள் கழித்தும் அன்பு மாறாம இருக்குமா?
*இறுதியில் இதயம் படம் போல முடிவை நம்மிடமே விட்டிடுறாங்க
இரண்டு மணி நேரம் போரடிக்காமல் போகும்.ஒரு சில குறைகள் இருந்தாலும் பார்க்கலாம்.
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment