Saturday, 17 July 2021

ஔவை_யார்

ஔவை_யார்?*

ஔவையார் ன்னு சொன்னதும் பெரும்பாலும் நம்ம எல்லாருக்கும் தெரியுறது K. P. சுந்தராம்பாள் முகம் தான்.

இன்னும் சரியா சொல்லனும்ன்னா ஔவையார் பாட்டி மாதிரி இருக்கவங்க, அப்டின்னு தான் நாம எல்லாரும் நெனச்சிக்கிட்டு இருக்கோம். சரி, அது ஒருபக்கம் இருக்கட்டும்.

மொதல்ல, ஔவையார் அப்படினா என்ன பொருள் ன்னு பாக்கலாம்.

ஔவையார் (அவ்வை) அப்படினா "முதுமகள்"ன்னு பொருள்.

முதுமகள் அப்படினா வயசானவங்க தானே? அப்போ, நாம நெனைக்குறது சரிதானேன்னு நாம யோசிக்கலாம். ஆனா வயசில் முதிர்ந்தவர்கள் மட்டுமே முதுமகள்ன்னு சொல்ல முடியாது. அறிவில் முதிர்ந்தவர்கள் கூட முதுமகள் தான்!

உதாரணமா, "கொற்றவை" பேருக்கான பொருள் "கொற்றம்+அவ்வை". அதாவது வெற்றியில் முதுமகள். இதுமாதிரி தான் ஔவைன்னு சொன்னாலே வயசான பாட்டி ன்னு நினைக்க வேணாம்.

அடுத்தது. தமிழ்ல மொத்தம் 6 ஔவையார்கள் இருக்காங்க...

1. சங்ககால ஔவை (கி.பி 2ம் நூற்றாண்டு) மன்னன் அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்தது அவரின் இளமையான தோழி.

2. பாரி மகளிர் அங்கவை-சங்கவைக்கு திருமணம் செய்து வைத்ததாய் சொல்லப்படும் ஔவை. ஆனா, அப்படி ஒரு ஔவை உண்மையில் இல்லை. கபிலர் தான் அந்த திருமணத்திற்கு பாடுபட்டவர்.

3. விநாயகர் அகவல் பாடிய ஔவை ( கி.பி 9ம் நூற்றாண்டு).

4. ஆத்திச்சூடி மற்றும் கொன்றை வேந்தன் எழுதிய ஔவை (கி.பி. 12ம் நூற்றாண்டு)

5. பேய் விரட்டி பாடல் பாடிய ஔவை (கி.பி 17ம் நூற்றாண்டு)

6. பந்தன் அந்தாதி பாடிய ஔவை (கி.பி 18ம் நூற்றாண்டு)

No comments:

Post a Comment