Friday, 9 July 2021

படித்தது

தீ விபத்துகளால் பதிக்கப்படும் கப்பல்களை கடல் நீர் கொண்டு அணைக்காமல் கெமிக்கல்ஸ் கொண்டு அணைக்க முற்படுவது ஏன்?

நண்பன் படத்துல ஒரு வசனம் வரும் ஞாபகம் இருக்கா ??

"Salt Water is the good conductor of Electricity".அதாவது உப்பு நீர் மின்சாரத்தின் சிறந்த கடத்தி என்று பொருள்.

கடல் நீரும் உப்பு தானே ??

கப்பல்ல மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள்,மின்சாரம் சார்ந்த சாதனங்கள் கண்டிப்பாக இருக்கும் தானே ??

தீ புடிச்சா கடல் நீரை உபயோகப்படுத்தி அணைச்சா என்ன ஆகும் ?? தீய அணைக்குறவங்களுக்கும் மின்சாரம் கடந்து ஷாக் அடிச்சு மரணித்து போய்விடுவார்கள்,கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம்.

அப்போ மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தால் உபயோகபடுத்தலாமா என்ற கேள்வி வரும்.

அப்போதும் யூஸ் பண்ண முடியாது.காரணம்,மின்சார சாதனங்கள் மேல உப்பு தண்ணிய பீச்சு அடிச்சா என்ன ஆகும் ??

Salt water is Corrosive in nature.அதாவது உப்பு நீர் அரிக்கும் தன்மை கொண்டது.

உப்பு நீர் அரிச்சி சர்க்யூட் போர்ட்,மின்சார இயந்திரங்கள்,சாதனங்கள் எல்லாமே வீணா போயிடும்.

சரி அப்போ எப்படி தான் தீய அணைக்கறது ?

தீய மொத்தம் நாலு வகையா பிரிச்சிருக்காங்க.ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு விதமான தீயணைப்பான்கள் யூஸ் பண்ணப்படும்.

நான்கு வகைகள் :

கிளாஸ் A :

பேப்பர்,துணி,மரக்கட்டை,பிளாஸ்டிக் போன்றவைகள் தீ பிடித்தால்,உலர் மணல் அல்லது தண்ணீரை பயன்படுத்தியே தீயை அணைக்கலாம்.

Dry Chemical பவுடர் (DCP)தீயணைப்பான்களும் பயன்படுத்தலாம்.இந்த DCP தீயணைப்பான்கள் ஆல் ரவுண்டர் மாதிரி எல்லா விதமான தீக்களுக்கும் பயன்படுத்தலாம்.

கிளாஸ் B :

எளிதில் எரியக்கூடிய திரவங்கள் மற்றும் வாயுக்கள்.அதான் பெட்ரோல்,டீசல்,பெயிண்ட்,வீட்ல யூஸ் பண்ற சமையல் எரிவாயு எல்லாம்.

இதுக்கு,Foam தீயணைப்பான் தான் உகந்தது.Foam என்றால் சோப்பு நுரை மாதிரி தான்.இந்த மாதிரி பெட்ரோல்,டீசல் தீ புடிச்சா இந்த Foam தீயணைப்பான் பயன்படுத்துவார்கள்.இதுல 20 பெர்ஸன்ட் சோப்பு நுரை இருக்கும்,இந்த நுரை தீக்கு மேல ஒரு லேயர் மாதிரி உண்டாக்கிடும்.இதனால நெருப்பு எரிய ஆக்சிஜென் கிடைக்காம தீ தானா நின்னுபோய்டும்.

தண்ணீரை யூஸ் பண்ணி அணைக்கலாமா என்றால் கண்டிப்பாக கூடாது.காரணம் தண்ணீரின் மேல் எண்ணெய் மிதக்கும்,சோ தண்ணீர் யூஸ் பண்ணி அணைச்சா தீ மளமளவென வேகமா பரவிடும்.

மேலே சொன்ன மாதிரி DCP தீயணைப்பான்களும் பயன்படுத்தி தீயை அணைக்கலாம்.ஆனால்,அணைந்த பின்னும் மீண்டும் தீ பிடிக்க (Re-ignition) வாய்ப்புகள் அதிகம்.

கிளாஸ் C :

மின்சாரம் மற்றும் மின்சாரம் சார்ந்த தீ.

இதுக்கு கார்பன் டை ஆக்சைட்(Carbondioxide) தீயணைப்பான் தான் உகந்தது.ஏற்கனவே சொன்ன மாதிரி தண்ணீர் கண்டிப்பா யூஸ் பண்ண முடியாது.

இந்த கார்பன் டை ஆக்சைட் தீயணைப்பான்கள் ,வெளிப்புற மின்சார தீக்களுக்கு(Open Air) பயன்படுத்துவதில் சிரமம் இல்லை,அதுவே கதவு மூடப்பட்ட மின்சார கண்ட்ரோல் ரூம் போன்ற இடங்களில் உபயோகப்படுத்தினால்,தீ அணைந்துவிடும்,ஆனால்,அறையினுள் கார்பன் டை ஆக்சைட் அளவு அதிகமாகி, ஆக்ஸிஜன் அளவு கம்மியாகி மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே இதுபோன்ற இடங்களில் DCP தீயணைப்பான்கள் உபயோகப்படுத்தலாம்.என்ன,மின்சார சாதனங்களுக்கு, தீயணைப்பானில் உள்ள கெமிக்களால் பாதிப்பு ஏற்படலாம்.

#கிளாஸ் D : உலோகங்களால்(மெட்டல்) ஏற்படும் தீ.

லித்தியம்,மெக்னீசியம் போன்ற எளிதில் தீ பிடிக்கக்கூடிய உலோகங்கள்.

இது போன்ற தீக்களுக்கு DCP தீயணைப்பான்கள் உகந்தது

கிளாஸ் K : சமையலறை தீ

அதாவது சமையல் எண்ணெயால் ஏற்படும் தீ.

இது போன்ற தீக்களுக்கு பொட்டாசியம் அசிடேட் (Wet Chemical Extinguisher) பயன்படுத்தலாம்.Fire Blanketகளும் அவசரத்துக்கு பயன்படுத்தலாம்.

இது போக,அனைத்து முக்கியமான கட்டிடங்கள்,மால்கள்,திரையரங்கம் போன்ற இடங்களில் Fire Hydrant system கண்டிப்பாக இருக்கும்.அதை பயன்படுத்தியும் தீயை அணைக்கலாம்.

ஆக,முதலில் என்ன எரிகிறது அதற்கு எந்த விதமான தீயணைப்பான்கள் பயன்படுத்தலாம் என்ற புரிதல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

-படித்தது

No comments:

Post a Comment