Sunday, 25 July 2021

பாரதிதாசன்

புதுமலர் அல்ல; காய்ந்த
     புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
     தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல முகம் அவட்கு
     வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
     ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே

-பாரதிதாசன்

No comments:

Post a Comment