அமைதியின் நீட்சியில் மனம் பிரபஞ்சம் போல விரிந்துகொண்டே போகிறது.
இது போன்ற தருணங்களில் மூச்சு விடுவதுதான் சிறிது நிவாராணத்தை தருகிறது- சு.ரா
$தேறுகிறவர்களுக்கு மதிப்பு ஏற்படுவது எதனால்?
தேறாதவர்கள் பலர் இருப்பதால்
-க.நா.சு
#சதீஸ்
படைப்பின் அடிப்படை இயல்பு உணர்ச்சி. ஒட்டுமொத்த மானுட வாழ்வின் உணர்ச்சி அது. ஒரு காட்சியை நம்பகத்தன்மையோடு உருவாக்கி, அதன் பின்னணியில் அந்த உணர்ச்சியைப் படியவைக்கிறார்கள் படைப்பாளிகள். கிட்டத்தட்ட ஒரு கிணற்றைத் தோண்டி, அதில் ஊற்றைச் சுரக்கவைப்பதுபோல. பொருத்தமான ஒரு படிமத்துக்காக வேட்கை கொண்ட விலங்குபோல அவர்கள் மனம் அலைந்தபடியே இருக்கிறது. உணர்ச்சிகளின் அடையாளங்களாகவும் படிமங்களாகவும் படைப்பாளிகள் கண்டறியும் காட்சிகளும் பொருட்களும் எதார்த்தத்தில் நம் பார்வையில் தினம்தினமும் பட்டு நகர்கிறவையாகவே இருக்கக்கூடும். படைப்பாளிகள் அவற்றை தனித்தன்மை மிக்கதாக ஒரே கணத்தில் மாற்றிவிடுகிறார்கள். கல்லிலிருந்து சிற்பத்தைச் செதுக்கி எடுப்பதுபோல.
- பாவண்ணன்
கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப் படுத்தியும் விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள்; அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.
- தி.ஜ.ர
நிறக்குருடு என்ற பார்வைக்குறைபாடு என்னிடம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சிவப்பு என்று குறிப்பிடும் நிறம், என் பார்வையில் நீங்கள் நீலம் என்று குறிப்பிடும் நிறமாகத் தெரிகிறது. ஆகவே, படிப்படியாக நான் அது சிவப்பு நிறமே என்ற பொது ஒப்பந்தத்திற்கு வந்து சேர்கிறேன். இதை வேறு எங்கும் சரிபார்த்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. கவிதைகளைப் புரிதலிலும், மனிதர்களின் எண்ண ஓட்டங்களிலும் இப்படித்தான்.
- எம்.யுவன்
இயற்கையைப் புரிந்துகொள்வதற்கு மெய்த்தேடலையும் ஆன்மீக வழிகளையும் தாண்டிய ஒரு மார்க்கத்தினையே இலக்கியம் உருவாக்க முயற்சிக்கிறது.
- எஸ்.ராமகிருஷ்ணன்
No comments:
Post a Comment