Sunday, 29 October 2017

நூல்

*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*

_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_

*நூல் அறிமுகம்:* 3⃣6⃣

*நூலின் பெயர்:* முதல் பெண்
*நூல் ஆசிரியர்* சோ.மோகனா

   *செய்திதாள் வந்தால்*
   *அப்பாவிடமும்*
   *கீரைக்காரி வந்தால்*
   *அம்மாவிடமும்*
   *சொல்லும் வழக்கத்தை*
   *குழந்தைக்கு கற்றுக்*
   *கொடுத்தது யார் ?*

*இது கவிஞர் பாலபாரதியின் புகழ்பெற்ற கவிதை...*

*பெண் என்பவளுக்கும் அறிவிற்கும் தொடர்பு இல்லை என காலகாலமாக உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்தின் ஆதங்கமே இந்த கவிதை...*

*ஆனால் உண்மை என்ன ?*

*இந்த நூலை வாசித்துப்பாருங்கள்..*

*பிரமித்துப்போவீர்கள்..*

*பெண்கள் வரலாற்று நூலை எழுதுவதுண்டு..*

*பெண்களின் வரலாறு எழுதப்பட்டதுண்டா..*

*எத்தனை பேருக்கு முதல் பெண் தத்துவஞானி தெரியும்..*

*எத்தனை பேருக்கு முதல் பெண் வானியல் அறிஞரை தெரியும்..*

*தெரியாது என்ற பதிலை தவிர வேறு ஒன்றும் தெரியாது...*

*இந்த நூல் பெண்களின் வரலாற்றை பேசுகிறது..*

*ஒவ்வொறு துறையிலும் சாதித்த முதல் பெண் பற்றி தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார் ஆசிரியர்...*

*கி மு 546 ல் வாழ்ந்த முதல் பெண் கணிதவியலாளர் தியானோ..*

*உலகின் முதல் பெண் வேதியியல் விஞ்ஞானி தப்புட்டி பெலாட்டி கல்லிம்.*

*தத்துவஞானியாக இருந்ததற்கே கிழித்தெறிந்து கொல்லப்பட்ட உலகின் முதல் பெண் தத்துவஞானி ஹைப்பேஷியா..*

*இதேபோல் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர், முதல் இலக்கியவாதி, முதல் போராட்ட வீராங்கனை என 9 முதல் பெண்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது இந்த நூல்..*

*வாசியுங்கள்..*

*வரலாறு மறைக்கப்பட்டதால் மறுக்கபடும் மதிப்பீடுகள் பற்றி அறிவீர்கள்..*

*பக்கம்:* 80
*விலை:* ரூ 50
*வெளியீடு:* பாரதி புத்தகாலயம்

           _வாசிப்பை சுவாசமாக்குவோம்_

நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல்  🦋

No comments:

Post a Comment