*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*
_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_
*நூல் அறிமுகம்:* 3⃣6⃣
*நூலின் பெயர்:* முதல் பெண்
*நூல் ஆசிரியர்* சோ.மோகனா
*செய்திதாள் வந்தால்*
*அப்பாவிடமும்*
*கீரைக்காரி வந்தால்*
*அம்மாவிடமும்*
*சொல்லும் வழக்கத்தை*
*குழந்தைக்கு கற்றுக்*
*கொடுத்தது யார் ?*
*இது கவிஞர் பாலபாரதியின் புகழ்பெற்ற கவிதை...*
*பெண் என்பவளுக்கும் அறிவிற்கும் தொடர்பு இல்லை என காலகாலமாக உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்தின் ஆதங்கமே இந்த கவிதை...*
*ஆனால் உண்மை என்ன ?*
*இந்த நூலை வாசித்துப்பாருங்கள்..*
*பிரமித்துப்போவீர்கள்..*
*பெண்கள் வரலாற்று நூலை எழுதுவதுண்டு..*
*பெண்களின் வரலாறு எழுதப்பட்டதுண்டா..*
*எத்தனை பேருக்கு முதல் பெண் தத்துவஞானி தெரியும்..*
*எத்தனை பேருக்கு முதல் பெண் வானியல் அறிஞரை தெரியும்..*
*தெரியாது என்ற பதிலை தவிர வேறு ஒன்றும் தெரியாது...*
*இந்த நூல் பெண்களின் வரலாற்றை பேசுகிறது..*
*ஒவ்வொறு துறையிலும் சாதித்த முதல் பெண் பற்றி தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார் ஆசிரியர்...*
*கி மு 546 ல் வாழ்ந்த முதல் பெண் கணிதவியலாளர் தியானோ..*
*உலகின் முதல் பெண் வேதியியல் விஞ்ஞானி தப்புட்டி பெலாட்டி கல்லிம்.*
*தத்துவஞானியாக இருந்ததற்கே கிழித்தெறிந்து கொல்லப்பட்ட உலகின் முதல் பெண் தத்துவஞானி ஹைப்பேஷியா..*
*இதேபோல் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர், முதல் இலக்கியவாதி, முதல் போராட்ட வீராங்கனை என 9 முதல் பெண்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது இந்த நூல்..*
*வாசியுங்கள்..*
*வரலாறு மறைக்கப்பட்டதால் மறுக்கபடும் மதிப்பீடுகள் பற்றி அறிவீர்கள்..*
*பக்கம்:* 80
*விலை:* ரூ 50
*வெளியீடு:* பாரதி புத்தகாலயம்
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_
நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல் 🦋
No comments:
Post a Comment