*#வாசிப்பதை பகிர்வோம்#* *#பகிர்வதற்காக வாசிப்போம்#*
திண்டுக்கல்லில் 6 வது புத்தக திருவிழா *நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை* நடைபெற உள்ளது.
புத்தக திருவிழா துவங்க இன்னும் 54 நாட்கள் தான்...
*புத்தக திருவிழாவினை முன்னிட்டு நான் ஏற்கனவே பல்வேறு தளங்களில் அறிமுகம் செய்துள்ள 148 நூல்களில் நான் சிறந்ததென கருதும் நூல்களினை மறு பதிப்பு*
*"வாசிப்பை நேசிப்போம் "*
*திரு ச. சுப்பாராவ்* அவர்கள் எழுதியது
வாசிப்பு ஒரு கலை .
ஒவ்வொருவரும் இனிமேல் நிறைய வாசிக்க வேண்டும் என வருடந்தோரும் முடிவு செய்வதும் பின்னர் அதனை தொடராமல் விடுவதும் வாடிக்கையாகவே உள்ளது .
1457 ல் கூட்டன்பர்ப்கால் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் மேலை நாடுகளில் 500 ஆண்டுகளாக வாசிக்கும் பழக்கம் துவங்கியது .
ஆனால் இந்தியாவில் 1553ல் ஆன்ட்ரிக் அடிகளாரின் முயற்சியில் தம்பிரான் வணக்கம் என்ற முதல் அச்சு நூல் வந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பிரிட்டிஷ்அரசும் கிருஷ்த்துவ மிஷினரிகளும் மட்டுமே அச்சுக்கூடங்களை நடத்த முடியும் என்ற நிலையின் காரணமாக அச்சு நூல்களின் பரவலாக்கம் இந்தியாவில் வளரவில்லை .
அச்சு பயன்பாட்டிற்கு முன் ஏடுகளைப்படிக்க ஏகப்பட்ட ராமாயணப்பலகை எனும் சிக்குப்பலகை தேவைப்பட்டது , ஏட்டில் உள்ற எழுத்துக்கள் தெரிய ஏட்டின் மீது மஞ்சள் அல்லது கரி பூசப்பட வேண்டும் , மெய்யெழுத்தை பயண்படுத்த மாட்டார்கள் அதனால் படிப்பது மிகவும் கடினம் . எனவே யாராவது ஒருவர் சத்தமாக படிக்க பிறர் கேட்பதே வழக்கமாக இருந்தது .
வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும் .
டைம்ஸ்ஆப் இந்தியாவின் கணக்கெடுப்பில் ஒருவர் சராசரியாக படிக்கும் நேரம் 24 நிமிடம்தான் . உலகில் படிக்கத் தெரிந்தவர்களில் அரை சதவீதத்தினர்தான் உண்மையான வாசகர்களாக இருக்கிறார்களாம் .
புள்ளி விபரம் கிடக்கட்டும் வாசிக்க என்ன செய்யலாம் என சொல்கிறது இந்த பிரசுரம் .
சாதாரணமாக நாம் பார்க்கும் தொலைக்காட்டசி நிகழ்ச்சிகளுக்கிடையே படிக்க ஆரம்பித்தால் போதுமாம் இந்த பிரசுரம் சொல்கிறது .
அதே போல் முகநூலில் , வாட்சப்பில் , வங்கி வரிசை காத்திருப்பில் , ரயில் நிலையத்தில் , பேருந்து பயணத்தில் என ஏராளமான நேரம் இருக்குதாமுங்க .
புத்தகத்த எடுத்தாலே தூக்கம் வருதா ?
அதுக்கும் தீர்வு இந்த புத்தகத்துல இருக்குங்க .
புத்தகம் படிப்பதற்கான நேரத்தை காதலியை சந்திப்பதற்கான நேரத்தை தேர்வு செய்வது போல தேர்ந்தெடுக்கனுமாம் . நேரமும் அப்படித்தான் .
யாராவது நேரங்கெட்ட நேரத்துல காதலிகிட்ட பேசுவோமா ?
ஒன்னுமே புரியலனு சொல்ரீங்களா அதற்கும் ஆலோசனைகள் இந்த புத்தகத்தில இருக்குது
அதுசரி வழக்கமா வாசிக்கிற நமக்கு ஒரே சமயத்துல ஒன்னரை இஞ்ச் நீள வரியை ஒரே நேநத்தில பார்க்க முடியும் . கொஞ்சம் புத்தகத்த தூரமா வச்சு படிச்சா ? இன்னும் கொஞ்சம் கூடுதல் வரிகளை பார்க்கலாம் . வேகமாவும் படிக்கலாம் .
வாசிப்பை வேகமாக்க இப்படி பல டிப்ஸ் இந்த புத்தகத்திலே இருக்கு .
நிறைய புத்தகம் படிக்க ஆசைதான் . ஆனால் பொருளாதார வசதி?
அதுக்குத்தாங்க நல்ல நண்பர்கள் , அப்பறம் நூலகங்கள்னு நான் சொல்லல. இந்தபுத்தகம் சொல்லுது .
தமிழ் மட்டுமல்ல ஆங்கில நூல்களையும் படிக்க நல்ல ஆலோசனை இந்த புத்தகத்துல இருக்கு
இப்போ மின் நூல்கள் .
வாசிக்க வாசிப்பை வளர்க்க ஏராளமான வழிகள் இப்புத்தகத்தில் .
ஏற்கனவே ஏராளமான புத்தகங்கள் நம்மைச்சுற்றிஎன்னைப் படி , என்னைப்படி என கூத்தாடுகின்றன .
இத்தனை புத்தகம் படித்தால்தான் வெற்றி என்பதல்ல , படிக்கும் ஒவ்வொரு புத்தகமுமே வெற்றிதான் என சொல்லி முடிக்கும் இந்த பிரசுரத்தினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது .
*"வாசிப்பை நேசிப்போம் "*
ஆசிரியர் :- ச .சுப்பாராவ் .
விலை:- பத்து ரூபாய்தாங்க .
*ஒரு செட் பஜ்ஜி விலையிலே ஒரு புத்தகம் . அதுவும் படிக்க வழிகாட்டுற புத்தகம் .*
வாங்குங்க ...
வாசிங்க ..
நண்பர்களையும் வாசிக்க பழக்குங்கள் .
*#வாசித்ததைப் பகிர்வோம்#*
*#பகிர்வதற்காக வாசிப்போம்#*
~
*மு. வீரகடம்ப கோபு*
திண்டுக்கல்.
*#8489277070*
No comments:
Post a Comment