*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*
_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_
*நூல் அறிமுகம்:* 3⃣1⃣
*நூலின் பெயர்:* பொது உடைமைதான் என்ன ?
*நூல் ஆசிரியர் :* ராகுல சாங்கிருத்தியாயன் (தமிழில் கண.முத்தையா )
*ராகுல்ஜி..*
*சங்கராச்சாரியாருடைய உழைப்பு, தயானந்த சரஸ்வதியின் தீவிரம், புத்தபகவானின் சாந்தம் இவற்றின் மொத்த உருவம் தான் ராகுல்ஜி என கூறுகிறார் வரலாற்று ஆசிரியர் ஒருவர்...*
*மனித சமுதாய வளர்ச்சியின் கூறுகளை கதைகளின் வடிவில் சொன்ன " வால்கா முதல் கங்கை வரை " என்ற நூல் போல் ஒரு உலகில் எந்த மொழியிலும் வந்ததில்லை..*
*ராகுல்ஜி எழுதிய மற்றொறு புகழ்பெற்ற நூல்தான் " பொது உடைமை என்றால் என்ன " என்ற இந்த நூல்..*
*1935 ல் வெளியிடப்பட்ட இந்த நூல் பொது உடைமை அறிவின் நுழைவாயில் என போற்றப்படுகிறது...*
*11 தலைப்புகளில் நம்முடன் உரையாடுகிறது இந்த நூல்...*
*முதலாளித்துவ கொள்கையின் தோற்றம்..*
*பொது உடைமை கொள்கை ஏன் தோன்றியது...*
*நம் சாதி நோயும், பொது உடைமை கொள்கையும்...*
*பொது உடைமை கொள்கையும் , கடவுள் - மதமும்..*
*பொது உடைமை கொள்கையும், பெண்ணடிமையும்...*
*பொது உடைமை கொள்கையும், மனித சுதந்திரமும்...*
*பொது உடைமை கொள்கையின் எதிர்காலமும் அதன் விரோதி நண்பர்களும்..*
*என்ற தலைப்புகள் முக்கிய தலைப்புகள்..*
*பொது உடைமை குறித்து விளக்க பல நூல்கள் இருந்தாலும் ராகுல்ஜியின் இந்த நூல் தனி சிறப்பு மிக்கது.. ஏனெனில் எழுத்து ராகுல்ஜியின் எழுத்து என்பதால்...*
*வாசியுங்கள்..*
*ராகுல்ஜியின் பொதுவுடைமை விளக்கம் உங்களுக்கு புது வெளிச்சம் காட்டும்..*
*பக்கம்:*96
*விலை:* ரூ 60
*வெளியீடு:* தமிழ் புத்தகாலயம்
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_
நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல் 🦋
No comments:
Post a Comment