Sunday, 29 October 2017

நூல் அறிமுகம்

*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*

_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_

*நூல் அறிமுகம்:*  3⃣0⃣

*நூலின் பெயர்:* சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
*நூல் ஆசிரியர் :* ஈரோடு தமிழன்பன்

*இந்த நூல் உலக கவிஞர்களை கவிதை நடையில் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நூல்...*

*ஆம் ஈரோட்டு தமிழன்பன் தன் கவிநடையில் 13 கவிஞர்களை அறிமுகம் செய்து கொண்டே  அவர்களின் கவிதை வரிகளையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்..*

*இந்த உலக கவிஞர்கள்,  கண் சிவப்பதற்கான கவிதைகளையும், இதழ்கள் சிரிப்பதற்கான கவிதைகளையும் அளித்தவர்கள்..*

*புல்லின் இதழ்கள் என்னும் ஒற்றைநூலில் உலகை வசப்படுத்திய வால்ட் விட்மன்..*

*சோவியத் புரட்சிக்கு கவிதை வெடிகள் தயாரித்து கொடுத்த விளாடிமீர் மயாகோவ்ஸ்கி..*

*பிரெஞ்சு புரட்சி பெற்றடுத்த குழந்தை என சிலாகிக்கப்படும் ஷெல்லி...*

*ஏகாபத்தத்தியத்தை தன் துப்பாக்கி மற்றும் கவிதைகளால் விரட்டிய ஹோசிமின்..*

*மானுடத்தை உரக்க கூவிய ஞானக்குயில் கலீல் கிப்ரான்...*

*சீன பரட்சியை தன் கவிதை மூலம் விரைவுபடுத்திய மாசேதுங்...*

*இக்பால்...*

*பாப்லோ நெருடா...*

*நசீம் ஹிக்மத்..*

*லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்...*

*அய்க்கியூங்...*

*ரசூல் கம்ஸதோவ்...*

*செங்கோர்...*

*என உலகை தங்கள் கவிதை நெம்புகோலால் புரட்டி போட்ட 13 உலக கவிஞர்களை பற்றிய அறிமுகம் ...*

*இந்த அறிமுக பயணத்தில் பல அற்புத ஆளுமைகளை சந்திக்கலாம்.*

*அவர்களின் கண்ணொளியில் உங்கள் பாதை புதிய திசையில் சமைக்கப்படலாம்..*

*வாசியுங்கள்..*

*தமிழகத்தின் மிகச்சிறந்த ஒரு கவிஞர் மூலம் நடத்தப்படும் இந்த உலக  கவிஞர்களின் மற்றும் அவர்களின் கவிதைகள் அறிமுக வேள்வியில்  சொக்கி போவீர்கள்..*

*பக்கம்:*132
*விலை:* 50
*வெளியீடு:* நர்மதை வெளியீடு

           _வாசிப்பை சுவாசமாக்குவோம்_

நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல்  🦋

No comments:

Post a Comment